News

Thursday, 12 May 2022 05:50 PM , by: T. Vigneshwaran

Letter from MK Stalin to declare Tamil as the language of communication

உச்சநீதிமன்ற அமர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அமைய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கு பல்வேறு விவகாரங்களை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும். அதனால், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற அமர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அமைய வேண்டும்.

நீதிபதிகளை நியமிப்பதில் சமூகப் பன்முகத்தன்மை, சமூக நீதியை பேணும் வகையில் மாற்றம் தேவை.

நீதித்துறையில் கூட்டாட்சித்தன்மை பிரதிபலிக்கப்பட உச்சநீதிமன்ற நிரந்தரக் கிளைகளை நிறுவ வேண்டும்.

சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லியில் உச்சநீதிமன்றத்தில் கிளைகளை அமைக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் அமல், விவரம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)