News

Tuesday, 21 May 2019 02:47 PM

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான, எல்.ஐ.சி.நிறுவனத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘அப்ரண்டிஸ் டெவலப்மெண்ட் ஆபீசர் (ADO)’ பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. விருப்பமுள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன.

பணி விவரங்கள்

பணியிடம்: இந்தியா முழுவதும்

நிறுவனம்: எல்ஐசி 
அமைப்பு: மத்திய அரசு 
பதவி: Apprentice Development Officer (ADO) 
காலியிடங்கள்: 8,581 
தென்மண்டல காலியிடங்கள்: 1,257

மாத சம்பளம்: 34,503 ரூபாய்

கல்வி தகுதி: பட்டப்படிப்பு, மேலாண்மை படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

வயது வரம்பு: 21-30. குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

முன் அனுபவம்: 2 வருட முன் அனுபவம் தேவை.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்/எஸ்டி பிரிவினருக்கு 50 ரூபாய். இதர பிரிவினருக்கு 600 ரூபாய்.

முக்கிய தேதிகள்

அறிவிக்கை நாள்: 20 மே 2019

விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள்: 20 மே 2019

விண்ணப்பிக்க கடைசி நாள்: 9 ஜூன் 2019

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்: 9 ஜூன் 2019

ஆன்லைன் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வழங்கப்படும் நாள்: 29 ஜூன் முதல்

முதல்நிலை தேர்வு தேதி: 6 & 13 ஜூலை 2019

மெயின் தேர்வு நடக்கும் தேதி: 10 ஆகஸ்ட் 2019

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க https://www.licindia.in/Bottom-Links/careers என்ற பக்கததில் சென்று இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் தங்களுடைய  அனைத்து விபரங்களை சரியாக பதிவு செய்ய வேண்டும்.

K.SAKTHIPRIYA

KRISHIJAGRAN

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)