மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 August, 2019 11:47 AM IST

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. சென்னையில் நேற்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது மற்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.

நாகை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட  இடங்களில்  சுமார் ஒரு மணி நேரம் கன மழை பெய்துள்ளது. கடந்த சில மாதங்களாக பெரம்பலூர் மாவட்டத்தில் நிலவி வந்த கடும் வறட்சியை தொடர்ந்து நேற்று இரவு பரவலாக மழை பெய்துள்ளது. இது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொடர்ந்து மழை நீடித்தால் விவசாயம் மற்றும் குடி தண்ணீர் பஞ்சம் தீரும் என பொதுமக்கள் தெரிவித்தனர் . 

குமரி கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 55 கிலோ மீட்டர் வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெப்ப சலனம் காரணமாக நீடித்து வரும் காற்று சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்றும், குறிப்பாக மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

K.Sakthipriya
Krishi Jagran

English Summary: Light Rainfall for Next Four Days in Tamil Nadu and Pondicherry Coastal Areas : Heavy Rains were Reported in inner and Northern districts
Published on: 14 August 2019, 11:47 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now