பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 26 April, 2022 11:28 AM IST

கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சென்னையில் மீண்டும் லாக்டவுனை அமல்படுத்துவதுடன் பொதுமக்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இதனால், சென்னையில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் இடையே எழுந்துள்ளது.


கொரோனா மூன்றாவது அலை அடங்கிய இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் தலைத் தூக்கி உள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சில வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்திலும் கொலைகாரக்கொரோனா ஆட்டம் போடத் தொடங்கிவிட்டது. இதனால் மக்களிடையே அச்சமும் தீவிரவமாகப் பரவி வருகிறது. இது ஒருபுறம் இருக்க, பொதுஇடங்களில் மாஸ்க் கட்டாயம், தீவறினால் ரூ.500 அபராதம் எனக் கட்டுப்பாடுகளும் மறுபுறம் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், சென்னை கிண்டி, ஐஐடி வளாகத்தில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அங்கு பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் என மொத்தம் 55 பேருக்கு ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதைதொடர்ந்து அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நேற்று மேலும் ஐந்து பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று மேலும் 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஐஐடி வளாகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.

உயர் கல்வி நிறுவனமான ஐஐடியில் கொரோனாவுக்கு இலக்காவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருவது, கொரோனா நான்காவது அலையின் அறிகுறியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதன் அடிப்படையில், தலைநகர் சென்னையில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுவிடுமா என்ற அச்சம் பொதுமக்களிடையே வேகமாகப் பரவி வருகிறது.

மேலும் படிக்க...

மனஅழுத்தத்தைக் குறைத்து, ஆயுளை அதிகரிக்கும் Brisk Walk!

உடல் பருமனைக் குறைக்க உதவும் மாம்பழம்- இத்தனை நன்மைகளா?

English Summary: Lockdown again in the beating Corona-Chennai?
Published on: 25 April 2022, 08:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now