சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 31 March, 2023 4:30 PM IST
Gold Jewellery
Gold Jewellery

ஹால்மார்க் இல்லாமல் விற்பனை செய்யும் தங்க நகை விற்பனையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவையில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் செய்தியாளர் சந்திப்பில் அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

புதிய விதிகள்

இந்தியாவில் போலி தங்க நகைகளை விற்பனை செய்வதை தடுக்கும் நோக்கத்தில் இந்திய தர நிர்ணய அமைப்பு (BIS) சில விதிகளை அறிவித்துள்ளது. அதில் BIS ஹால்மார்க் முத்திரை, காரட்டில் தங்கத்தின் தூய்மை மற்றும் 6 இலக்க எண், எழுத்து கொண்ட HUID குறியீடு ஆகிய 3 அடையாளங்களைக் கொண்டுள்ளது. இந்நிலையில், இந்த விதிகள் நாளை (ஏப்ரல் 1) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், நகை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தும் விதமாகவும் கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

ஹால்மார்க் 

இதில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் ஆராய்ச்சியாளர் கவின் பேசும்போது, “ஹால்மார்க் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இனிமேல் எந்த நகை விற்பனையாளரும் HUID மார்க் இல்லாமல் விற்பனை செய்யக் கூடாது. வாங்குபவர்களின் தரத்திற்காக இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. நுகர்வோர் Huid இல்லாத நகைகளை வாங்காதீர்கள். மேலும் நகைகளின் நம்பகத்தன்மை குறித்து Bis care ஆப்பில் huid number பதிவு செய்தால் ஆய்வகத் தகவல் உட்பட அனைத்தும் வந்துவிடும்.

விதிகளுக்கு உட்படாத நகைகள் குறித்து Bis மொபைல் ஆப்பில் புகார் கொடுக்கலாம். அதே போல் இனிமேல் ஹால்மார்க் இல்லாமல் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

நகைகளுக்கான இந்த ஹால்மார்க் விதிமுறை சரியான தங்கத்தை மக்கள் வாங்குகிறார்கள் என்ற மூன்றாம் தரப்பு உத்தரவாதத்தை வாடிக்கையாளருக்கு வழங்குகிறது. அதோடு நகைக் கடைக்காரரின் திறன், தரத்திற்கான உறுதிப்பாடு மற்றும் தூய்மையில் நிலைத்தன்மையின் உறுதிப்பாட்டிற்கான வலுவான ஆதாரம் ஆகியவற்றை இது வழங்குகிறது. நாளை (ஏப்ரல் 1ஆம் தேதி) முதல் பிஐஎஸ் பதிவு செய்யப்பட்ட நகைக் கடைகள் HUID ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளை மட்டுமே விற்க வேண்டும் என நுகர்வோர் விவகார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க

புதிய சிம் கார்டு வாங்கும் போது கவனமாக இருங்கள்: மத்திய அரசு எச்சரிக்கை!

வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,500: மாநில அரசின் அருமையான திட்டம்!

English Summary: Look for this when buying gold jewellery: Public warning!
Published on: 31 March 2023, 04:30 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now