News

Friday, 18 February 2022 06:56 PM , by: T. Vigneshwaran

LPG cylinder

ஒரு ஊடக அறிக்கையின்படி, அரசாங்க ரேஷன் கடைகளை நிதி ரீதியாக திறமையானதாக மாற்ற, உணவுத்துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே சமீபத்தில் பல்வேறு மாநில அரசுகளின் அதிகாரிகளுடன் ஒரு மெய்நிகர் சந்திப்பை நடத்தினார், அதில் இந்த முன்மொழிவுகள் வைக்கப்பட்டன.

பெட்ரோலிய நிறுவனங்களுடன் சந்திப்பு(Meeting with petroleum companies)

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி, நிதி மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகங்களின் அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்), மற்றும் சிஎஸ்சி இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் (சிஎஸ்சி) ஆகியவற்றின் அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சிறிய எல்பிஜி சிலிண்டர்களை அரசு ரேஷன் கடைகள் மூலம் சில்லறை விற்பனை செய்வதற்கான திட்டத்தை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் (OMCs) பிரதிநிதிகள் பாராட்டினர். இந்த முன்மொழிவின் பேரில், ஆர்வமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சார்பில் இந்த திட்டத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

முத்ரா கடனின் பலன்கள்(Benefits of Mudra Loan)

அரசு ரேஷன் கடைகள் மூலம் நிதி சேவைகளை விற்பனை செய்வதற்கான முன்மொழிவில், ஆர்வமுள்ள மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று நிதி சேவைகள் துறை (DFS) பிரதிநிதிகள் தெரிவித்தனர். இந்த ரேஷன் கடைகள் மூலம் முத்ரா கடன் வழங்கவும் அரசு பரிசீலித்து வருவதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில், மத்திய உணவுத் துறை செயலர் பாண்டே, ரேஷன் கடையில் எல்பிஜி சிலிண்டரை நிதி ரீதியாக திறம்படச் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். பொது சேவை மையத்தின் (CSC) உதவியுடன் இந்தக் கடைகளின் நிதிப் பயன்பாட்டை அதிகரிக்கலாம் என்று மாநில அரசுகள் பரிந்துரைத்துள்ளன.

மேலும் படிக்க

கிராமத்தில் இந்த தொழிலை தொடங்கி, நிறைய சம்பாதிக்கலாம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)