மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 20 July, 2021 2:59 PM IST
LPG cylinder

விலை உயர்வு காரணமாக சாதாரண மக்கள் அவதிபட்டனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலை வானத்தைத் தொடும் அதே வேளையில், எல்பிஜி விலை அதிகரிப்பு மக்களை அதிர்சிக்கு  உள்ளாக்கியுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் ஜூலை முதல் நாளிலேயே எல்பிஜி சிலிண்டர்களின் விலையை சிலிண்டருக்கு ரூ .2550 ஆக உயர்த்தியுள்ளன. இதன் பின்னர், மானியம் வாடிக்கையாளர்களின் கணக்கில் சிலிண்டருக்கு சுமார் 75 ரூபாய் மட்டுமே வருகிறது. இப்போது 14.2 கிலோ உள்நாட்டு எல்பிஜி சிலிண்டரின் விலை ஒன்பது நூறு ரூபாயைத் தாண்டியுள்ளது.

15 மாதங்களில் எல்பிஜி சிலிண்டரின் விலையில் ரூ. 321 அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் எல்பிஜி சிலிண்டரின் விலை 621 ரூபாயாக இருந்தது, ஆகஸ்டில் இது 683 ரூபாயாக அதிகரித்தது. அடுத்த மாதத்தில் அதாவது செப்டம்பரில் இந்த தொகை சிலிண்டருக்கு ரூ. 692 ஆக அதிகரித்தது. ஜூன் 2021 இல், எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ. 907 ஆகவும், ஜூலை மாதம் ரூ. 25.50 அதிகரித்து ரூ. 933 ஆகவும் உயர்த்தப்பட்டது. இதற்கிடையில், பல வாடிக்கையாளர்கள் கணக்கில் மானியத் தொகையைக் கூட பெறவில்லை.

அத்தகைய வாடிக்கையாளர்களில் நீங்களும் இருந்தால், உங்கள் கணக்கில் மானியத் தொகை எவ்வாறு வரும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

எளிதான வழி இங்கே

  • முதலில், உங்கள் தொலைபேசி அல்லது கணினியில் இணையத்தைத் ஓபன் செய்யுங்கள்.
  • பின்னர் www.mylpg.in இனைத்தளத்தை திறக்கவும்.
  • இதற்குப் பிறகு நீங்கள் வலதுபுறத்தில் எரிவாயு நிறுவனங்களின் எரிவாயு சிலிண்டர்களின் புகைப்படத்தைக் காண்பீர்கள். உங்கள் சேவை வழங்குநர் எதுவாக இருந்தாலும், எரிவாயு சிலிண்டரின் புகைப்படத்தைக் கிளிக் செய்க.
  • இதற்குப் பிறகு உங்கள் எரிவாயு சேவை வழங்குநரின் புதிய பேச் (page) திறக்கும்.
  • இதற்குப் பிறகு, sign in மற்றும் புதிய பயனர்(new user) விருப்பம் மேல் வலது பக்கத்தில் தோன்றும், அதைத் கிளிக் செய்யவும்.
  • உங்கள் ஐடி ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்தால், நீங்கள் உள்நுழைய வேண்டும்.
  • ஐடி இல்லை என்றால் நீங்கள் புதிய பயனரைத் (new user) கிளிக் செய்ய வேண்டும். இணையதளத்தில் உள்நுழைக.
  • இதற்குப் பிறகு, ஒரு புதிய விண்டோ திறக்கும், வலது பக்கத்தில் காஸ் சிலிண்டர் முன்பதிவு வரலாற்றைக் காண்பீர்கள். இதைக் கிளிக் செய்யவும்.
  • கிளிக் செய்யத பிறகு, எந்த சிலிண்டரில் உங்களுக்கு எவ்வளவு மானியம் வழங்கப்பட்டுள்ளது, எப்போது வழங்கப்பட்டது என்ற தகவல் இங்கிருந்து கிடைக்கும்.
  • அதே நேரத்தில், நீங்கள் எரிவாயு முன்பதிவு செய்திருந்தால், உங்களுக்கு மானியப் பணம் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் கருத்து பட்டனைக் கிளிக் செய்ய வேண்டும். இங்கிருந்து நீங்கள் மானியப் பணம் பெறவில்லை என்ற புகாரையும் பதிவு செய்ய முடியும்.
  • இது தவிர, உங்கள் கணக்கோடு எல்பிஜி ஐடியை நீங்கள் இன்னும் இணைக்கவில்லை என்றால், நீங்கள் விநியோகஸ்தரிடம் சென்று அதைச் செய்து முடிக்க வேண்டும்.
  • இது மட்டுமல்லாமல், 18002333555 என்ற எண்ணுக்கு இலவசமாக அழைத்து புகாரை பதிவு செய்ய முடியும்.

மானியம் ஏன் நிறுத்தப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்:

எல்பிஜியில் உங்களுக்கு மானியம் கிடைக்கவில்லை என்றால், அது ஆதார் இணைப்பு கிடைக்காததால் இருக்கலாம். எல்பிஜியின் மானியம் மாநிலங்களில் வித்தியாசமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ .10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு மானியம் அனுப்பப்படுவதில்லை. இந்த ஆண்டு வருமானம் ரூ .10 லட்சம் கணவன்-மனைவி இருவரின் வருமானத்திலும் சேர்க்கப்படுகிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க

இந்தியாவில் எலக்ட்ரிக் பஸ்ஸை இயக்க சென்னை உள்பட 9 நகரங்கள் தேர்வு!

இந்தியாவில் எலக்ட்ரிக் பஸ்ஸை இயக்க சென்னை உள்பட 9 நகரங்கள் தேர்வு!

கல்லூரிகளில் சேர ஜூலை 26 முதல் விண்ணப்பிக்கலாம்! மாணவர்களுக்கு அழைப்பு

English Summary: LPG Grant Renewal: To get the grant money in LPG, you can do this simple task sitting at home.
Published on: 20 July 2021, 02:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now