News

Wednesday, 15 March 2023 11:27 AM , by: Muthukrishnan Murugan

madurai Agricultural college students imparted awareness to farmers

மதுரை வேளாண்மை கல்லூரியின் மாணவர்கள் குழு ஊரக வேளாண்மை பணி அனுபவத்திட்டத்தின் கீழ் கிராம பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் வேளாண் துறை சார்ந்த பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.

இந்த வகையில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவன் மு.ஶ்ரீனிவாசன் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் வட்டாரத்தில் தங்கி பயின்று வருகின்றனர்.  கொத்தப்பல்லி கிராமத்தில் தென்னை மரங்கள் அதிகளவில் பூச்சிகளால் பாதிக்கப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் முறை குறித்து மாணவர் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கினார். அதன் விவரம் பின்வருமாறு-

தென்னை மரத்தின் ஒரு புதிய மற்றும் நேரடி வேரை 1 மீட்டர் இடைவெளியில் மண் வெட்டியால் தோண்டி, பென்சில் தடிமன் கொண்ட வேரைக் கண்டறிந்து சாய்வாக வெட்டி கொள்ளவும். பிறகு, பாலித்தீன் பையில் தண்ணீர் 10 மி.லி மற்றும் பூச்சிகொல்லி 10 மி.லி எடுத்து கலந்து கொண்டு வேரில் வைத்து நூலால் கட்டவும். 24 மணிநேரம் கழித்து நீரினை வேர் உறிஞ்சி விட்டதா என பரிசோதிக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், வேறொரு வேரை தேர்ந்து எடுத்து இக்கரைசலுடன் சேர்த்து கட்டவும் என்று செயல் விளக்கம் கொடுத்தார்.            

கருப்பு தலை கம்பளி பூச்சி, சிவப்பு பனை அந்துப்பூச்சி,காண்டாமிருக வண்டு ஆகியவற்றின் தாக்குதலை தடுக்க இந்த முறை உதவும் என மாணவர் ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டார். இதில் பெரும்பான்மையான விவசாயிகள் கலந்து கொண்டு  பயனடைந்தார்கள்.

இதைப்போல் மற்றொரு மதுரை வேளாண்மை கல்லூரி மாணவரான கண்ணன் மட்டபாரை  கிராமத்தில் தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டுகளின் தாக்கம் அதிகம் இருப்பதை அடுத்து அதனை கட்டுப்படுத்தும் முறைகளை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கினார். பூச்சிகளின் எண்ணிக்கை ஆண்டு முழுவதும் காணப்படுகிறது, ஆனால் பருவமழை தொடங்கும் போது ஜூன்- செப் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் பூச்சி தாக்குதலின் அறிகுறிகள் அதிகம் இருக்கும் என்பதை விவசாயிகளுக்கு உணர்த்தினார்.

பூச்சித்தாக்குதலினால்  மகசூலில் 10 முதல் 15% வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. காண்டாமிருக வண்டு சேதத்தின் அறிகுறிகளாக கருதப்படுபவை- வண்டுகள் இளங்குருத்துகளை துளைத்து உட்செல்வதால் குருத்தோலை மற்றும் இளம் பூம்பாளைகள் பாதிக்கப்படுகின்றன. வண்டு துளைத்து உட்சென்று விட்ட குருத்தின் துவாரத்தில் இளம் ஓலைகளின் சக்கைப் பகுதி வெளியே தள்ளப்பட்டு காணப்படும். தாக்கப்பட்ட இலை விரிந்தவுடன் விசிறி போன்று முக்கோண வடிவில் வெட்டியது போன்று காணப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலாண்மை:

(i) கலாச்சார முறை:

நல்ல சுகாதாரத்தை பராமரிக்க தோட்டத்தில் உள்ள அனைத்து இறந்த தென்னை மரங்களையும் அகற்றி எரிக்கவும் (இவை இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருக்கும்).

குழிகளில் இருந்து எருவைத் தூக்கும் போதெல்லாம் எரு குழிகளிலிருந்து (பூச்சியின் இனப்பெருக்கம் செய்யும் நிலம்) வண்டுகளின் பல்வேறு உயிர் நிலைகளைச் சேகரித்து அழிக்கவும்.

(ii) இயந்திர முறை:

தாக்குதலின் உச்சக் கட்டத்தில், வயது வந்த வண்டு ஜிஐ கொக்கிகளைப் பயன்படுத்தி பனை கிரீடத்திலிருந்து பிரித்தெடுக்கப்படலாம். முதிர்ந்த வண்டுகளை கவர்ந்து அழிக்க கோடை மற்றும் பருவமழை காலங்களில் முதல் மழைக்கு பின் ஒளி பொறிகளை அமைக்கவும்.

(iii) இரசாயன முறை:

ஒரு நோய்த்தடுப்பு நடவடிக்கையாக, சுழலைச் சுற்றியுள்ள மேல் மூன்று இலை அச்சுகள் பின்வரும் கலவைகளால் நிரப்பப்படலாம்:

(அ)  செவிடோல் 8ஜி 25 கிராம் + மெல்லிய மணல் 200 கிராம், இது ஏப்ரல்-மே, செப்டம்பர்-அக்டோபர் மற்றும் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் ஒரு வருடத்தில் மூன்று முறை செய்யப்பட வேண்டும்.

(iv) பொறி முறை: காண்டாமிருக வண்டு

வண்டுகளைப் பிடிக்கவும் கொல்லவும் காண்டாமிருக வண்டுகளை கவரும் பெரோமோன் பொறி @ 5 பொறிகள்/எக்டருக்கு அமைக்கவும். டிஸ்பென்சரை வாரத்திற்கு ஒருமுறை 2 லிட்டர் பூச்சிக்கொல்லி கரைசல் கொண்ட பிளாஸ்டிக் வாளியில் தொங்கவிடலாம். சிக்கிய வண்டுகளை அப்புறப்படுத்தலாம்.

(v) உயிரியல் முறை:

பச்சை மஸ்கார்டின் பூஞ்சை, மேடரைசியம் அணிசோபிலே (Metarrhizium anisopliae) @ 5 x 10 ^11 / m 3 - 250ml மேடரைசியம் கல்ச்சர் + 750ml தண்ணீரை எரு குழிகளில் தெளித்து பூச்சியின் நிலைத்தன்மையை சரிபார்க்கவும்.

இப்படி செய்வதன் மூலம் வண்டு பாதிப்பினை கட்டுப்படுத்தலாம் என்று ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பற்றிய விழிப்புணர்வை கூடியிருந்த விவசாயிகள் மத்தியில் வேளாண் கல்லூரி மாணவர் கண்ணன் ஏற்படுத்தினார்.

மேலும் காண்க:

ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டம்- விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கிய வேளாண் மாணவர்கள்

மின் மோட்டார் குதிரைத்திறன் ஏற்ப மானியத்துடன் விவசாயிகளுக்கு மின் இணைப்பு- விண்ணப்பிக்க தகுதி என்ன?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)