நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 April, 2022 8:16 AM IST
Madurai Chithirai Festival

மதுரை சித்திரைத் திருவிழாவில் ஏப்ரல் 16 ஆம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வுக்காக, வைகை அணையிலிருந்து நேற்று மாலை ஆற்றின் வழியாக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

நீர்மட்டம் (Water Level)

நவம்பர், டிசம்பரில் பெய்த மழையால் வைகை அணை நீர்மட்டம் 70.11 அடி வரை உயர்ந்தது. அணை மொத்த உயரம் 71 அடி. சில மாதங்களாக இருப்பில் உள்ள நீர் தொடர்ந்து குடிநீருக்கு பயன்படுத்தப்பட்டதால் அணை நீர்மட்டம் குறைந்தது. நேற்று மாலை அணை நீர்மட்டம் 68.54 அடியாக இருந்தது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 35 கனஅடி.

சித்திரை திருவிழா (Chithirai Festival)

மதுரை சித்திரை திருவிழாவில் ஏப்ரல் 16 ஆம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக வைகை அணையிலிருந்து நேற்று மாலை வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணை நிர்வாக பொறியாளர் அன்புசெல்வம், உதவி செயற்பொறியாளர்கள் குபேந்திரன், ஆனந்தன் முன்னிலையில் அணையின் கீழ் மதகு மற்றும் பவர் ஹவுஸ் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.

நேற்று முதல் ஏப்ரல் 16 வரை மொத்தம் 216 மி.கன அடி வெளியேற்ற இருப்பதாகவும், மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடபட்டி குடிநீருக்காக வழக்கம் போல் வினாடிக்கு 72 கனஅடி வெளியேறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க

தென்னையில் நீர் மேலாண்மை: ஈரப்பதத்தை தக்க வைக்கும் மூடாக்கு!

கறவை மாடு வளர்ப்பு: இளம் தலைமுறை தவிர்க்க காரணம் என்ன?

English Summary: Madurai Chithirai Festival: Water opening at Vaigai Dam!
Published on: 12 April 2022, 08:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now