சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 4 September, 2019 5:34 PM IST

மஹிந்த்ரா சம்மிட் அக்ரி சயின்ஸ் மற்றும் சுமிட்டோ கார்ப்ரேஷன், ஜப்பான் இணைந்து 'மஹிந்த்ராவின் பிரக்ரிதி' என்னும் புதிய பொருளை அறிமுகப்படுத்தி உள்ளது. வேளாண் துறையில் ஒரு நிலையான வளர்ச்சியும், இயற்கை விவசாயத்திற்கும் இது வழி வகை செய்யும் என கூறியுள்ளது.

நிலையான விவசாயத்திற்கு சாத்தியமான பல்லுயிர் அமைப்பு, ரசாயனம் இல்லா விவசாயம் போன்றவற்றை மஹிந்த்ரா நிறுவனம் தனது புதிய உற்பத்தியின் மூலம் வழங்க உள்ளது. இதில் தாவரங்களுக்கு தேவையான உயர்தரமான நுண்ணுயிர் ஊட்டச்சத்து, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை போன்ற அனைத்திற்கும் தீர்வு வழங்க உள்ளது. இதன் மூலம் நமக்கு சிறந்த காய்கறிகள், பழங்கள், தானியங்களை உற்பத்தி செய்வதன் மூலம் ஏற்றுமதியயை அதிகரிக்கலாம்.

மஹிந்த்ரா அக்ரி சொலுஸ்யன் இயக்குநர், அசோக் சர்மா கூறுகையில்," நிலையான விவசாயத்திற்கு உதவும் வகையில் பொருட்களை அறிமுக படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். எங்களின் தயாரிப்பு மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் அதிக மகசூல் கிடைக்கவும் வழிசெய்யும் என்றார்".

உலக தரம் வாய்ந்த பயிர் மற்றும் பயிர் பாதுகாப்பு, அதற்கு தேவையான தரமான மண் அனைத்தையும் தருவதற்கான சூழலை அமைத்து கொடுக்கும் என்றார். புதிய தொழில் நுட்பம் விவசாகிகளின் வேளாண் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வாகும் மேலும் அவர்களின் வருமானம் அதிகரிக்க வழிவகுக்கும்.     

இந்தியாவை பொறுத்தவரை 40% விவசாய பொருட்கள் பூச்சிகள், புழுக்களால் பாதிக்கப்படுகின்றன. விவசாயம் நடைபெறும் நிலப்பரப்பு ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. எனவே குறைந்த நிலத்தில் தரமான பொருட்களை உற்பத்தி செய்யவதற்கு ஜப்பான் நிறுவனமும்,  மஹேந்த்ரா நிறுவனமும் இணைந்து செயல் படும் என்றார்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Mahindra Summit Agriscience Launches PRAKRTI by Mahindra for Farmers
Published on: 04 September 2019, 01:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now