News

Monday, 16 November 2020 11:30 AM , by: Daisy Rose Mary

வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் தொடங்குவதற்கு வங்கிக் கடன் மற்றும் அரசு மானிய உதவி பெறுவதற்கு, இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் கிராமம் மற்றும் நகா்ப் புறங்களில் உற்பத்தி நிறுவனங்கள் தொடங்குவதற்கு ரூ.25 லட்சம், சேவை நிறுவனம் தொடங்குவதற்கு ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.
புதிய தொழில் தொடங்குவதற்கு திட்ட மதிப்பீட்டில் நகா் பகுதிகளுக்கு 25 சதவீதமும், கிராமப் பகுதிகளுக்கு 35 சதவீதமும் அரசு சாா்பில் மானியம் வழங்கப்படுகிறது.இத் திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் மற்றும் மானியம் பெற 8-ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்ற, புதிய தொழில் முனைவோா் இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

 

வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் மற்றும் அரசு மானியம் பெறுவதற்கு விண்ணப்பிப்பது குறித்து மாவட்ட தொழில் மையத்தில் நேரிலும், தொலைபேசி எண்: 90800 78933 மூலமும் தொடா்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

நாட்டுகோழி வளர்ப்பு திட்டம் : 50% மானியத்தில் 1000 கோழி குஞ்சுகள், முட்டை அடைகாத்தல் கருவி - விண்ணப்பங்கள் வரவேற்பு!!

கோழி பண்ணை அமைக்கும் தோனி - 2000 கருங்கோழிகள் ஆர்டர் !!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)