மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 February, 2021 5:04 PM IST

தலைநகர் டெல்லியில் கடந்த 26ம் தேதி நடைபெற்ற டிராக்டர் பேரணிக்குப் பின் நூறுக்கும் அதிகமான விவசாயிகள் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. மாயமான விவசாயிகளை 6 பேர் கொண்ட குழு அமைத்து தேடி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லை பகுதிகளை முற்றுகையிட்டு கடந்த இரு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தோல்வியடையும் பேச்சுவார்த்தைகள்

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய அரசு, விவசாயிகளுடன் நடத்திய 11 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தன. மேலும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியும் வன்முறையில் முடிந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மாயமான விவசாயிகள்

இந்த பேரணியை தொடர்ந்து மீண்டும் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். ஆனால் இந்த பேரணி மற்றும் வன்முறை சம்பவத்துக்கு பின் 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என விவசாயிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

6 பேர் குழு & உதவி எண் அறிவிப்பு

மேலும், மாயமான விவசாயிகளைத் தேடவும், இது குறித்து ஆய்வு செய்ய 6 பேர் குழு ஒன்றை அமைத்துள்ள விவசாயிகள், மாயமானவர்களின் விவரங்களை இந்த குழுவினர் சேகரித்து, அது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவிப்பார்கள் என சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்து உள்ளது. இதேபோல், மாயமானவர்கள் பற்றி தகவல் அறிந்தால் தெரிவிப்பதற்கு செல்போன் எண் ஒன்றையும் அவர்கள் வெளியிட்டு உள்ளனர்.

மேலும் படிக்க...

மழை பாதிப்பு : 11 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு!!

அதிக மகசூல் பெற அற்புதமான வழி- விபரம் உள்ளே!

பயிர்க்கடன் நிறுத்தம் இல்லை - விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

English Summary: many farmers found missing after the tractor rally in delhi! 6 member team inquiring about them
Published on: 01 February 2021, 05:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now