நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 January, 2022 3:20 PM IST
Mattupongal: Special worship

சிங்கம்புணரி பகுதியில் மாடுகளுக்கு படையல் போட்டு வழிபாடு நடத்தி விவசாயிகள் மாட்டுப்பொங்கலை கொண்டாடினர். விவசாயிகளுக்கு உறுதுணையாக நிற்கும் மாடுகளுக்கு தை மாதம் 2 ஆம் நாள் சிறப்பு வழிபாடு நடத்தி வணங்கினார்கள்.

பாரம்பரிய மாட்டுப் பொங்கல் (Traditional Cow Pongal)

விவசாயிகள் மாட்டுப்பொங்கல் தினத்தன்று பாரம்பரிய முறைப்படி மாடுகளுக்கும் குல தெய்வத்திற்கும் படையல் போட்டு வழிபாடு செய்வது வழக்கம். இப்பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மாட்டுப் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது. கிராம மக்கள் குழுவாக சேர்ந்து மாடுகளுக்கு பட்டி அமைது அதில் மாடுகளை கட்டினர். அலங்கரிக்கப்பட்ட மாடுகள் முன்பாக பெண்கள் வரிசையாக பொங்கல் வைத்தனர்.

அனைத்து பானைகளில் இருந்தும் தலா இரண்டு கரண்டி பொங்கல் எடுக்கப்பட்டு அதைக் கொண்டு கூட்டுபடையல் போடப்பட்டது. தேங்காய், இளநீர், வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட பொருட்களும் படையலில் வைக்கப்பட்டு மாடுகளுக்கும் குலதெய்வத்துக்கும் பூஜை செய்யப்பட்டது.

கிராம பெரியவர்கள் சாமியாடி அருள்வாக்கு கூறினர். பூஜை முடிந்ததும் படையல் பொருட்களை மாடுகளுக்கு ஊட்டிவிட்டு விவசாயிகளும் சாப்பிட்டனர். இதைத்தொடர்ந்து மாடுகள் மஞ்சுவிரட்டு திடலுக்கு கொண்டுசெல்லப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன.

மேலும் படிக்க

சிவகங்கையில் வெண்சேலை உடுத்தி பாரம்பரிய பொங்கல்!

தை மாத அறுவடையால் விவசாயிகள் உற்சாகம்!

English Summary: Mattupongal: Special worship for working cows!
Published on: 16 January 2022, 03:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now