News

Monday, 25 July 2022 10:46 PM , by: Elavarse Sivakumar

அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை பாராட்டு தெரிவித்தது. வருமான வரித்துறை சார்பில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விருது வழங்கி கெளரவித்தார்.விருதினை ரஜினிகாந்துக்கு பதிலாக அவரது மகள் சௌந்தர்யா பெற்றுக் கொண்டார்.

வருமானவரி தாக்கல் செய்பவர்கள் ஜூலை 31ஆம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்ய வேண்டும். 2021-22ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யுமாறு வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை நினைவூட்டுகிறது.

1860ம் ஆண்டு

பிரிட்டனின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக பணியாற்றிய சர் ஜேம்ஸ் வில்சன் வருமான வரியை அறிமுகம் செய்தார். 1860ம் ஆண்டு ஜூலை 24ம் தேதியன்று இந்தியாவில் வரி விதித்த அவர், செல்வந்தர்கள் மற்றும் ஆங்கிலேயர்களுக்கும் வரி விதித்தார்.

சர் ஜேம்ஸ் வில்சன் நினைவாகவும், வரிக் கணக்கை தாக்கல் செய்யுமாறு வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை நினைவூட்டும் விதமாகவும் வருமான வரி தினம் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 24ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

ரஜினிக்கு விருது

இதையொட்டி , தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை சார்பில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விருது வழங்கினார். விருதினை ரஜினிகாந்துக்கு பதிலாக அவரது மகள் சௌந்தர்யா பெற்றுக் கொண்டார்.

வரி செலுத்துபவராக இருப்பதை நினைத்து பொதுமக்கள் பெருமை கொள்ள வேண்டும் என்று தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற வருமான வரி தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய அவர், வருமான வரித்துறையின் நோக்கம் நாட்டின் நலனே தவிர, வரி செலுத்துவோருக்கு சுமை ஏற்படுத்துவது அல்ல என்று கூறினார்.

மேலும் படிக்க...

சிகரெட் பிடிக்கும் காளி- வைரல் ஆகும் விபரீதம்!

வீடு வாங்கப் பணத்திற்கு பதிலாக தர்பூசணி- மகிழ்ச்சியில் விவசாயிகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)