மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 May, 2019 5:07 PM IST

மருத்துவத்துறை மற்றும் பல் மருத்துவத்திற்கான படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப படிவம் வரும் ஜூன் 6 ஆம் தேதி முதல் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என இந்தியா மருத்துவத்துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில், 2019 -2020 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த துறையில் சேருவதற்கு அடிப்படை தகுதியான நுழைவு தேர்வு எனும் நீட் தேர்வு கடந்த மாதம் 5 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.

நீட் தேர்வினை நாடு முழுவதிலுமிருந்து 15 லட்சத்திற்க்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வினை எழுதினார்கள். தமிழகத்திலிருந்து மட்டும் 1 லட்சத்து 19 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். நீட் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகும் நிலையில், மருத்துவ கல்லூரி விண்ணப்ப படிவம் ஜூன் 6 ஆம் தேதி முதல் இணையதளத்தில் இருந்து மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என இந்திய மருத்துவ துறை கூறியுள்ளது.

http://www.tn.health.org/, http://www.tnmedicalselection.org/ ஆகிய இணையத்தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதல் கட்ட மாணவர்கள் கலந்தாய்வு ஜூன் 26 ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் என தகவல் வெளியிட்டுள்ளது.   

English Summary: MBBS And BDS Admission 2019: Applications Download From June 6 Onward: Counselling June 26
Published on: 16 May 2019, 05:07 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now