News

Saturday, 19 June 2021 02:51 PM , by: Daisy Rose Mary

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 8 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பேருந்து சேவையை அனுமதிக்கலாம் என மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மே மாதம் 10 தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதையொட்டி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களை தவித்து பிற மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து ஆலோசனை

தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 21 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. தற்போது கொரோனா நோய் தொற்று குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

பேருந்து சேவைக்கு அனுமதி?

அப்போது, நோய்த்தொற்று அதிகமுள்ள கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் பேருந்து சேவையை அனுமதிக்கலாம் என மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளது. 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என வல்லுநர் குழு பரிந்துரையில் தெரிவித்துள்ளது.

நோய்த்தொற்று குறையாத மாவட்டங்களில் தளர்வுகள் கூடாது எனவும் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. தொற்று குறைந்த மாவட்டங்களில் வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆலோசனை தற்போது முடிந்துள்ள நிலையில், இதுதொடர்பான உறுதியான முடிவுகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க...

தொழில்துறையை மேம்படுத்த சிறப்பு கடன்! கொரோனா ஊரடங்கால் பாதித்தோருக்கு உதவி

பிரதமரை சந்தித்து 30 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)