News

Thursday, 04 August 2022 12:46 PM , by: R. Balakrishnan

Mega Vaccination Camp

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தடுப்பூசிகள் செலுத்தும் பணி, 2021 இல் தொடங்கப்பட்டது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதனால், கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதால், தடுப்பூசி முகாம்களை அரசு நடத்தி வருகிறத.

பூஸ்டர் டோஸ் (Booster Dose)

தடுப்பூசி முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி, ஆறு மாதம் நிறைவடைந்தோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, வருகின்ற செப்டம்பர் மாதம் 30 வரை மட்டுமே இலவசமாக போடப்படும் என்பதால், அதற்குள் தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி போட, தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

தடுப்பூசி முகாம் (Vaccination Camp)

அதன்படி, 33வது மெகா தடுப்பூசி முகாம், 50 இடங்களில் வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதில், பூஸ்டர் டோஸ் போடாத, 3.50 கோடி பேருக்கு தடுப்பூசி போட, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

காலக்கெடு முடிவதற்குள் பொதுமக்கள் பூஸ்டர் டோஸை இலவசமாக போட்டுக் கொள்ளுங்கள். இல்லையெனில், பணம் கொடுத்து போட வேண்டிய நிலை உருவாகி விடும்.

மேலும் படிக்க

குரங்கம்மை நோய்த் தடுப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியயீடு!

செயற்கைகோளை வடிவமைத்த மதுரை மாணவிகள்: ஆசிரியர்கள் பெருமிதம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)