மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 June, 2021 7:15 PM IST
Credit : Daily Thandhi

மேட்டூர் அணை (Mettur Dam) நாளை ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட உள்ளது. இதன் எதிரொலியாக கல்லணை (Kallanai) புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது. அங்கு உள்ள கரிகாலன் சிலைக்கு புதுவர்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

முதல்வர் திறந்து வைக்கிறார்

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை நாளை ஜூன் 12-ந் தேதி (சனிக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) திறந்து வைக்கிறார். மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணையை வருகிற 16-ந் தேதி அதிகாலை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட செல்லும் வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லணையை ஆய்வு செய்ய உள்ளார்.

கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

புதுப்பொலிவுடன் அணை

மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளதன் எதிரொலியாக கல்லணை புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது. கல்லணையில் உள்ள பாலங்களில் பல்வேறு மராமத்து பணிகள் நடைபெற்று உள்ளன. பாலங்களில் கடந்த 10 ஆண்டுகளாக இருந்த பச்சை வண்ணத்தை மாற்றி ஊதா மற்றும் வெள்ளை வர்ணங்கள் பூசப்பட்டு வருகின்றன.

கல்லணையை கட்டி தஞ்சையை வளம் கொழிக்க செய்த மாமன்னன் கரிகாலன் சிலைக்கு, புதுவர்ணம் பூசும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாலங்களில் உள்ள பொறியாளர் ஆர்தர் காட்டன் சிலை, காவிரி அம்மன் சிலை, குறுமுனி அகத்தியர் சிலை, விவசாயி சிலை, இராஜராஜ சோழன் சிலை உள்ளிட்ட அனைத்து சிலைகளுக்கும் புது வர்ணம் பூசப்பட்டு வருகிறது.

மக்கள் ஆர்வம்

கொள்ளிடம் பாலத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலும் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. கல்லணை பூங்காவில் உள்ள ஆதி விநாயகர் கோவிலுக்கு புது வர்ணம் பூசப்படுகிறது. பாலங்களில் வர்ணம் பூசும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. காவிரியில் உட்பகுதியில் தண்ணீர் வெளியேறும் பகுதியில் இருபுறங்களிலும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. புதுவர்ணம் பூசப்பட்டு கல்லணை புதுப்பொலிவுடன் காட்சி அளிப்பதை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

மேலும் படிக்க

மண் மாதிரியை பரிசோதித்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு வேளாண் இயக்குநர் வேண்டுகோள்!

நெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு! விவசாயிகள் மகிழ்ச்சி!

English Summary: Mettur Dam with a new look! Water opening tomorrow!
Published on: 11 June 2021, 07:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now