625 சதுர அடி நிலம் போதும்- நாட்டுக் கோழி வளர்க்க 50 சதவீத மானியம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! உருளைக்கிழங்கு சாகுபடிக்கான இடுபொருட்களுக்கு மானியம்- வேளாண் மானியக் கோரிக்கையில் அறிவிப்பு கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 2 July, 2024 2:10 PM IST
MFOI Samridh Kisan Utsav-Haridwar

MFOI சம்ரித் கிசான் உத்சவ் நிகழ்வானது விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதையும், வளமான இந்தியாவின் வளர்ச்சிக்கு வேளாண் பங்களிப்பினை உறுதி செய்வதையும் முதன்மை நோக்கமாக கொண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கிரிஷி ஜாக்ரன் முன்னெடுப்பில் நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் பங்கேற்புடன் வெகு விமர்சையாக நடைப்பெற்றது.

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வார், பகவான்பூரிலுள்ள பிரின்ஸ் ஹோட்டலின் கான்ஃபரன்ஸ் ஹாலில் மஹிந்திரா டிராக்டர்ஸ் நிதியுதவி பங்களிப்போடு, 'வளமான இந்தியாவிற்கான பாதையில் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது' என்ற கருப்பொருளில் MFOI சம்ரித் கிஷான் உட்சாவ் நிகழ்ச்சி நடைப்பெற்றது. முத்தூட் ஃபைனான்ஸ் மற்றும் சோமானி சீட்ஸ் ஆகிய நிறுவனங்களும், பூஅம்ரித் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், ஹிரித்வார் வேளாண் அறிவியல் மையமும் இந்த நிகழ்விற்கு தங்களது ஆதரவினை வழங்கியிருந்தனர்.

500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு:

பும்ரித் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத் தலைவர் ரவிகிரண் சைனி கூறுகையில், "எங்கள் நிறுவனம் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் ஒத்துழைப்புடன், உற்பத்தி முதல் சந்தைப்படுத்துதல் வரை சந்தையில் போட்டி விலையைப் பெறுவதை உறுதி செய்கிறது. ஐஐடி ரூர்க்கி உடனான எங்கள் கூட்டாண்மை மூலம் , விவசாயிகள் நேரடியாக வானிலை அறிவிப்புகளைப் பெறுகிறார்கள்" என்றார்.

மஹிந்திரா டிராக்டர்களின் ZMM, திக்விஜய் ராஜ்புத் பேசுகையில், அதிநவீன விவசாய இயந்திரங்களினால் வேளாண் துறையில் ஏற்பட்ட மாற்றத்தை எடுத்துரைத்தார். அவரது விளக்கக்காட்சியில் சமீபத்திய மஹிந்திரா டிராக்டர் மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

ஹரித்வாரின் மாவட்ட தோட்டக்கலை அதிகாரி மஹிபால் பேசுகையில், ”க்ரிஷி ஜாக்ரனின் 'MFOI சம்ரித் கிசான் உத்சவ்' முயற்சிக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சி விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் தொழிலில் பெருமித உணர்வையும் ஏற்படுத்துகிறது” எனக் குறிப்பிட்டார்.

க்ரிஷி ஜாக்ரன் மற்றும் அக்ரிகல்ச்சர் வேர்ல்டின் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியரான எம்.சி. டொமினிக் நன்றியுரை வழங்கினார். எம்.சி.டொமினிக் பேசுகையில்,  “இந்த சம்ரித் கிசான் உத்சவை வெற்றியடையச் செய்ய நேரம் ஒதுக்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி. கடந்த ஆண்டு தில்லியில் உள்ள பூசா மேளா மைதானத்தில் பிரம்மாண்டமான கோடீஸ்வர விவசாயி விருது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம், இதில் நாடு முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோடீஸ்வர விவசாயிகள் (ரூ. 10 லட்சத்துக்கு மேல்) கலந்து கொண்டனர். இந்த விவசாயிகளுக்கு மாவட்டம், மாநிலம், தேசியம் என மூன்று நிலைகளில் விருதுகள் வழங்கப்பட்டன.”

” நடப்பாண்டு நடைப்பெற உள்ள நிகழ்விற்கு, ஹரித்வாரில் உள்ள விவசாயிகள் தங்களது பெயர்களை விருதுக்கு பரிந்துரைத்து, இந்த ஆண்டுக்கான 'மில்லியனர் ஃபார்மர் ஆஃப் இந்தியா விருது' நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், இதனால் அவர்கள் மாவட்டம் மற்றும் மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் அங்கீகாரம் பெற முடியும்.” எனவும் தெரிவித்தார்.

MFOI 2023- நிகழ்வினைத் தொடர்ந்து, Millionaire Farmer of India Awards 2024- நிகழ்வுக்கு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more:

ஊடுபயிராக பசுந்தீவன பயிர்- ஏக்கருக்கு ரூ.3000 அரசு மானியம்!

சொர்ணவாரி நெல் மற்றும் கம்பு பயிருக்கு பயிர் காப்பீடு- இறுதித்தேதி அறிவிப்பு!

English Summary: MFOI Samridh Kisan Utsav event held in Haridwar was well received by farmers
Published on: 02 July 2024, 02:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now