நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 8 March, 2024 3:17 PM IST
MFOI Samridh Kisan Utsav

MFOI சம்ரித் கிசான் உத்சவ் நிகழ்வானது விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதையும், வளமான இந்தியாவின் வளர்ச்சிக்கு வேளாண் பங்களிப்பினை உறுதி செய்வதையும் முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதும் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் நடைப்பெற்று வரும் MFOI சம்ரித் கிசான் உத்சவ் நிகழ்வானது வருகிற மார்ச் மாதம் 12 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் வெகு விமர்சையாக நடைப்பெற உள்ளது.

வேளாண்துறை சார்ந்து கடந்த 26 ஆண்டுகளாக ஊடகவியல் துறையில் இயங்கி வரும் கிரிஷி ஜாக்ரான் மற்றும் அக்ரிகல்ச்சர் வேல்ர்ட் இணைந்து வேளாண் துறையில் அதிதீவிரமாக செயல்படுவதோடு நல்ல வருமானம் ஈட்டும் முன்னோடி விவசாயிகளை கௌரவிக்கும் நோக்கத்தோடு MFOI (millionaire farmer of India) விருது வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்து இருந்தனர்.

MFOI 2024 நிகழ்வுக்கான முன்னோட்டம்:

இந்தியா முழுவதுமுள்ள விவசாயிகளை சிறப்பிக்கும் நிகழ்வாக சமீபத்தில் வெற்றிக்கரமாக நடைப்பெற்று முடிந்த, MFOI 2023 விருது நிகழ்வினைத் தொடர்ந்து, நடப்பாண்டிற்கான நிகழ்வுக்கு (MFOI Awards 2024) பரிந்துரை, மற்றும் விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து வரவேற்கப்படும் சூழ்நிலையில் MFOI சம்ரித் கிஷான் உட்சாவ் (samridh kisan uttsav) நிகழ்வு இந்தியாவின் பல பகுதிகளில் கிரிஷி ஜாக்ரன் சார்பில் நடைப்பெற்று வருகிறது.

MFOI சம்ரித் கிஷான் உட்சாவ் நிகழ்வு:

மார்ச் மாதம் உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் MFOI சம்ரித் கிஷான் உட்சாவ் நிகழ்வு நடைப்பெற திட்டமிடப்பட்டுள்ளதாக ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில், வருகிற மார்ச் 12 ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம் சட்டாரா பகுதியில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் மையத்தில் (KVK-borgaon)  MFOI சம்ரித் கிஷான் உட்சாவ் நடைப்பெற உள்ளது.

இந்த நிகழ்வில் முன்னோடி விவசாயிகள் பலரும், வேளாண் துறையில் முன்னணி நிறுவனங்களாக விளங்கும் மஹிந்திரா டிராக்டர்ஸ், தனுகா அக்ரிடெக் போன்ற நிறுவனங்களும் பங்குபெறும் என கூறப்பட்டுள்ளது.

மஹிந்திரா டிராக்டர்ஸ் நிறுவனம், விவசாய உபகரணங்களில் தனது சமீபத்திய கண்டுபிடிப்புகளை இந்த நிகழ்வில் காட்சிப்படுத்த உள்ளது. விவசாய நடைமுறைகளில் புரட்சியை ஏற்படுத்தவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் வடிவமைக்கப்பட்ட புதிய டிராக்டர்களின் நவீன அம்சங்கள் மற்றும் திறன்கள் குறித்து விவசாயிகளுக்கு நேரடி பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.

MFOI 2024- 100 பிரிவுகளில் விருது:

MFOI 2023- நிகழ்வினைத் தொடர்ந்து, Millionaire Farmer of India Awards 2024- நிகழ்வுக்கு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்வில் ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளதாகவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. MFOI விருதுகள் 2024- நிகழ்வானது, டிசம்பர் 1 முதல் டிசம்பர் 5, 2024 வரை நடைபெற உள்ளது.

Read more:

பிரச்சினைக்குரிய மண்ணில் உள்ள நிலைகள்- சரிசெய்வது எப்படி?

MFOI VVIF கிஷான் பாரத் யாத்ரா- கிரிஷி ஜாக்ரனுடன் STIHL கைக்கோர்பு

English Summary: MFOI Samridh Kisan Utsav will be planned on March 12 at Satara Maharashtra
Published on: 08 March 2024, 03:17 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now