மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 August, 2019 3:05 PM IST

1200 அடிக்குள் கட்டப்படும் கட்டிடங்களுக்கு இணையதளம் வாயிலாக கட்டிட மற்றும் திட்ட அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் எஸ்பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கட்டிடங்களுக்கான அனுமதி வழங்கும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை நடைமுறை படுத்தும் வகையில் பொதுமக்கள் தங்கள் மனைகளுக்கான கட்டிட மற்றும் திட்ட அனுமதியை இணையதளம் வாயிலாகவே பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதில் கட்டிட மற்றும் திட்ட அனுமதியை உள்ளாட்சி அமைப்புகள் எடுத்துக்கொள்ளும் கால அவகாசத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு மாதிரி கட்டிட விதிகள் 2016 இன் படி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மனை பிரிவுகள், உள்ளாட்சிகளால் அங்கீகரிக்கப்பட்ட தனிமனைகள், குடியிருப்பு கட்டிடங்கள் கட்டுவதற்கான அங்கீகரிக்கப்பட்ட  மனை பிரிவுகளில் 2500 சதுர அடி பரப்புக்கு மேற்படாத நிலத்தில் 1200 சதுர அடிக்குள் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு களஆய்வின்றி ஆவணங்கள் மூலம் கட்டிட மற்றும் திட்ட அனுமதி வழங்கப்படும்.

நடைமுறையில் உள்ள மனைப்பிரிவுகள், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும், அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை முறைப்படுத்தப்படும் திட்டத்தின்கீழ், 15 மாநகராட்சிகளில் முறைப்படுத்தப்பட்ட 7,291 மனைப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட 50,423 மனைகளும், 121 நகராட்சிகளில் முறைப்படுத்தப்பட்ட 7,145 மனைப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட 46,371 மனைகளும்,  528 பேரூராட்சிகளில் முறைப்படுத்தப்பட்ட 7,845 மனைப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட 86,163 மனைகளும், என இதுவரை மொத்தம் 22,281 மனை பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்ட 1,82,957 மனைகளின் உரிமையாளர்களும் இந்த திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

இனிமேல் மக்கள் தங்களது குடியிருப்புக்கான கட்டிட மற்றும் திட்ட அனுமதியை எளிய முறையில் பெறலாம். மேலும் இந்த நடைமுறையால் மக்கள் உள்ளாட்சியில் பதிவு பெற்ற பொறியாளர்களை தவிர வேறு உள்ளாட்சி அலுவலகங்களில் செல்ல வேண்டிய நிலை இருக்காது.

K.Sakthipriya
Krishi Jagran

English Summary: Minister P.S Velumani! New announcement to get Construction permission through Online
Published on: 29 August 2019, 03:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now