பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 1 August, 2022 8:29 PM IST
Modi's Poster Caught The Attention Of The People Of Coimbatore

கோவையில் பிரதமர் மோடி செஸ் விளையாடுவது போன்ற புகைப்படத்துடன் ' தமிழ்நாட்டில் தலைவரின் ஆட்டம் ஆரம்பம்" என்ற வாசகங்களுடன் பாஜகவினர் பல இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

கோவை லங்கா கார்னர், டவுன்ஹால் உட்பட பல இடங்களில் பா.ஜ.க சார்பில் சிவா என்பவர் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. பிரதமர் புகைப்படம் மற்றும் பாஜக கொடியுடன் உள்ள பெரிய போஸ்டர்கள் நகரின் பல இடங்களில் ஒட்டியுள்ளனர். அதில் பிரதமர் செஸ் விளையாடுவது போல புகைபடம் இடம் பெற்றுள்ளதுடன் "தமிழ்நாட்டில் தலைவரின் ஆட்டம் ஆரம்பம்" என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி சென்னை வந்திருந்த பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். பின்னர் 29ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின் அகமதாபாத் சென்றார். தமிழகம் வந்த பிரதமரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அதில் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி பற்றியும், வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் நடந்த செஸ் ஒலிம்பியாடின் தொடக்க நிகழ்ச்சியில், பிரதமர் மோடியும், தமிழக முதல்வர் ஸ்டாலினும், மேடையில் இணக்கமாக பேசியது, “தமிழகத்தில் இதே கூட்டணி தொடரும். இது தேர்தலுக்காக சேர்ந்த கூட்டணி அல்ல, கொள்கை கூட்டணி” என்று விளக்கமளிக்கும் அளவிற்கு இந்த சம்பவம் பேசப்பட்டது. அதுமட்டுமில்லமல் அதிமுகவும் உட்கட்சி பிரச்சனையில் தற்போது அகப்பட்டுள்ளதால், இந்த போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் படிக்க:

சென்னையின் இரண்டாவது விமான நிலையம், எங்கே தெரியுமா?

468 மது கடைகள் மூடல், சரக்கு மது பிரியர்கள் கடும் அவதி

English Summary: Modi's poster caught the attention of the people of Coimbatore
Published on: 01 August 2022, 08:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now