நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 September, 2020 11:59 AM IST
Credit : Dinamalar

கொலம்பியா பல்கலைக் கழகத்தின் மெயில்மேன் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் தொற்று நோய் துறையின் ஆராய்ச்சியாளர் ராபின் ஏ ரிச்சர்ட்சன் (Robin A Richardson) தலைமையில் கிராமங்களில் விவசாயிகளின் தற்கொலைகள் குறித்த ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்திருப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விவசாயிகளின் தற்கொலைக்கு முக்கிய காரணமே மழை அதிக அளவு பெய்து வெள்ளமாக மாறுவது தான். வெள்ளத்தில் (Flood) பயிர்கள் மூழ்கியதால், தன் உழைப்பும், நேரமும் வீணாகி தானியங்களும் வீணாவதை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலைக்கு முற்படுகிறார்கள்.

அதிர்ச்சித் தகவல் (Shocking information)

கனடாவில் மெக்கில் பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி (IIT) காந்தி நகர் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் (Research) தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமப்புறங்களில் 2001 முதல் 2013 வரையிலான கால கட்டத்தில் இறப்புகளின் எண்ணிக்கையை ஆய்வு செய்திருக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கிராமப்புறங்களில் 9,456 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.

தற்கொலை விகிதம் (Suicide rate)

பருவ காலங்கள் மற்றும் பயிர் விளைச்சல் ஆகியவற்றின் அடிப்படையில் தற்கொலைகளை ஆய்வு செய்ததில் வறட்சி காலங்களில் தற்கொலைகள் 3.6 சதவீதம் அதிகரித்துள்ளதும், மழைக் காலங்களில் 18.7 சதவீதம் அதிகரித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இது அனைவரிடத்திலும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து வறட்சியில் கூட ஓரளவு மகசூல் (Yield) கிடைத்து விடுகிறது என்றும், ஆனால் பெருமழையில் பயிர்கள் மூழ்குவதால் மகசூல் குறைந்து விடுகிறது என்றும் மிகத் தெளிவாக புரிகிறது.

Credit : Deccan Chronicle

வறட்சியும், வெள்ளமும் (Drought and floods)

வறட்சியில் (Drought) கூட பயிர்களுக்கு போர்வெல் மூலம் நிலத்தடி நீர் ஓரளவு கிடைத்துவிடும். ஆனால், போர்வெல் (Borewell) இல்லாது வான்மழையை மட்டுமே நம்பி உழவுத் தொழில் செய்யும் விவசாயிகள் மழையில்லாமல் வறட்சியின் போது விரக்தியில் தற்கொலை முடிவை எடுத்து விடுகின்றனர்.

வறட்சியை விட, மழையின் தாக்கம் அதிகளவு இருப்பின், வெள்ளத்தில் பயிர்கள் மிதந்தும், சூறாவளிக் காற்றில் பயிர்கள் சாய்ந்தும், மரங்கள் வீழ்ந்தும் விவசாயத்தை அடியோடு சாய்த்து விவசாயிகளை தற்கொலை முடிவை எடுக்கும் அளவிற்கு மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தி விடுகிறது.

இந்த கிராமப்புறங்களில் தண்ணீர் கிடைக்கும் தன்மை அடிப்படையில் ஆய்வு செய்துள்ளனர். இதுவரை தற்கொலைகளை தண்ணீர் கிடைக்கும் தன்மை அடிப்படையில் யாரும் ஆய்வு செய்ததில்லை. மேலும் தண்ணீர் இல்லாத வறட்சியான காலங்களைவிட அதிக மழையும் வெள்ளமும் ஏற்பட்ட காலங்களில்தான் அதிகமான தற்கொலைகள் (Sucide) நிகழ்ந்துள்ளன என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம், சூறாவளி, வறட்சி என எது வந்தாலும் விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் சில நல்ல திட்டங்களை (Scheme) அரசு அமல்படுத்தினால் விவசாயிகளின் தற்கொலைகள் தடுக்கப்பட்டு விவசாயம் காக்கப்படும்.

ரா.வ. பாலகிருஷ்ணன்

Krishi Jagran

மேலும் படிக்க...

பலன்கள் பல அள்ளித் தரும் மஞ்சளின் மகிமைகள்!!

அறுவடை செய்த நெல்மணிகளை பாதுகாப்பாக சேமிக்கும் வழிகள்:

English Summary: More rain than drought is the reason for farmers' suicide - shocking information in an Indian-foreign university Research
Published on: 16 September 2020, 11:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now