மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 January, 2021 9:04 AM IST
Credit : TNAU

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச வெப்பமண்டல வேளாண்மை நிறுவனம் (IITA)இபடான், நைஜீரியா இடையே வாழையில் கூட்டு ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வாழையில் வீரிய இரகங்கள் உற்பத்தி மேம்பாட்டிற்கான ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் கோ 1 மற்றும் கோ 2 வாழை வீரிய இரகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீரிய இரகங்கள் மலை வாழை மற்றும் நெய்பூவன் இரகங்களை ஒத்த இயல்புடையது. கூடுதலாக மூன்று முன்வெளியீட்டு கலப்பின வாழை இரகங்கள் NPH-02-01, H96/7 மற்றும் H 531 தற்பொழுது பல இடமதிப்பீடுகள் செய்யப்படுகின்றன.

நைஜீரியாவில் (இபடான்) உள்ள சர்வதேச வெப்பமண்டல வேளாண்மை நிறுவனத்தில் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக வாழை, மரவள்ளி, தட்டைப்பயிர், மக்காச்சோளம், சோயாபீன் கருணைக்கிழங்கு ஆகிய பயிர்களில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச வெப்பமண்டல வேளாண்மை நிறுவனம் (IITA)இபடான் நைஜீரியா இடையே வாழையில் கூட்டுஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் நீ. குமார் மற்றும் நைஜீரியாவின் IITA துணை இயக்குனர் முனைவர் டாஷூயல் கெண்டன் ஆகியோர்கள் முன்னிலையில் 26.01.2021 அன்று கையெழுத்தானது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் பதிவாளர் முனைவர். அ.சு.கிருட்டிணமூர்த்தி, முதன்மையர் (தோட்டக்கலை) முனைவர். இல.புகழேந்தி, முதன்மையர்; (வேளாண்மை) முனைவர் எம். கல்யாணசுந்தரம், பேராசிரியர் மற்றும் தலைவர் (பழ அறிவியல் துறை) முனைவர் மு.சை. அனீசா ராணி மற்றும் பேராசிரியர் முனைவர் எம்.ஆர் துரைசாமி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க...

வேளாண் பல்கலைக்கழத்தில் 21 காலிப் பணியிடங்கள்!

வேலையில்லாதவருக்கு அரசின் உதவித்தொகை! விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 31

IARI Recruitment 2021: ஆய்வாளர், கள உதவியாளர், இளம் பணியாளர்கள் மற்றும் பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு - விவரங்கள் உள்ளே!

மாதம் ரூ. 9,000 ஓய்வூதியம்! முதியவர்களுக்கு உதவும் சூப்பர் திட்டம்!

English Summary: MoU between TNAU and IITA, Ibadan, Nigeria for Collaborative Research in Banana
Published on: 28 January 2021, 09:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now