News

Tuesday, 07 June 2022 09:56 PM , by: R. Balakrishnan

Continuous rain

நீலகிரியில் கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த இரு வாரங்களில், 60 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. முதல் போகத்திற்கு கேரட், பீட்ரூட், உருளை கிழங்கு உள்ளிட்ட மலை காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது.

மழைப்பொழிவு அதிகரித்த காரணத்தினால், 60 சதவீதம் அளவுக்கு கேரட். பீட்ரூட் விவசாயம் பாதிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

தொடர் மழை (Continuous Rain)

ஊட்டி அருகே, எம்.பாலாடா, பர்ன் ஹில், கப்பத்தொரை மற்றும் மாவட்டத்தில் பிற பகுதிகளில், 100 ஏக்கர் அளவுக்கு மலை காய்கறிகள் அழுகி பாதிக்கப்பட்டது. அறுவடைக்கு தயாரான மலை காய்கறிகளை விவசாயிகள் அவசர அவசரமாக அறுவடை செய்து வருகின்றனர்.

தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலபேரி கூறுகையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்தந்த பகுதி உதவி இயக்குனர்கள் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

மேலும் படிக்க

மண்வளம் காக்க தென்னை நாரில் கிப்ட் பேக்: மாற்றத்துக்கான வழி!

இ-நாம் வழியாக பருத்தி ஏலம்: மகிழ்ச்சியில் விவசாயிகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)