News

Sunday, 08 November 2020 08:00 PM , by: KJ Staff

Credit : Hindu Tamil

பொதுமக்கள் இன்று பிறப்பு, இறப்பு, இருப்பிடம் என பலவித சான்றிதழ்கள் (Certificates) பெற அரசு அலுவலகத்திற்கும், இ-சேவை மையத்திற்கும், நெட் சென்டர்களுக்கும் அலைய வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையை மாற்ற திட்டமிட்ட, கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் வசந்தராஜன், நடமாடும் இ-சேவை மையத்தை (Moving E-Service Center) துவக்கியுள்ளார்.

நடமாடும் இ-சேவை மையம்:

நடமாடும் இ-சேவை மையத்தின் துவக்க விழா, ஈச்சனாரியில் நடந்தது. அப்பகுதியை சேர்ந்த, 100 பேருக்கு மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீடு (Medical insurance) திட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாவட்ட பார்வையாளர் மோகன் மந்த்ராச்சலம், செயலாளர் சந்திரசேகர், அமித்ஷா பேன்ஸ் கிளப் மாநில தலைவர் முரளி உள்பட பலர் பங்கேற்றனர்.

திட்டத்தின் அம்சங்கள்:

கிணத்துக்கடவு சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிப்போர், பிறப்பு, இறப்பு, இருப்பிடம், வருமானம், சாதி, பட்டா, சிட்டா பெறுதல், ரேஷன் கார்டுக்கு (Ration Card) பதிவு செய்தல், விலாசம் மாற்றம், விவசாயிகளை மத்திய அரசின் திட்டங்களில் இணைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும். இரு வாகனங்கள் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன. மக்கள் அலைச்சலை தவிர்ப்பதே, இதன் முக்கிய நோக்கம்.

நடமாடும் இ-சேவை மையம், பொதுமக்களுக்கு பேருதவியாக இருக்கும். இனி, வயதானவர்கள் உட்பட அனைவருக்கும் அலைச்சல் இருக்காது. இத்திட்டம் பொதுமக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில், நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

இனிப்பு வகைகளைப் பரிசோதிக்க, நடமாடும் உணவுப் பரிசோதனை கூடம்!

சென்னையில் 3 நடமாடும் அம்மா உணவகங்கள்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)