மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 21 June, 2021 8:19 PM IST

சீர்காழி வட்டாரத்தில் பருத்தி செடிகளில் மர்ம நோய் தாக்கி உள்ளது. இதனை சாி செய்ய வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

மர்ம நோய் தாக்குதல்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டார பகுதிகளான திருவெண்காடு, நெப்பத்தூர், அகனி, திருவாலி, சின்ன பெருந்தோட்டம், பெருந்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் தற்போது பருத்தி சாகுபடி (Cotton Cultivation) செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட கிராமங்களில் பருத்தி காய் முற்றி பருத்தி வெடித்துள்ளது.

இதனால் பஞ்சு எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு பருத்தி சாகுபடியில் விவசாயிகள் லாபம் கிடைக்கும் என்று எண்ணிய நிலையில், கடந்த சில நாட்களாக பருத்தி செடியில் திடீரென மர்ம நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பருத்தி செடிகள் காய்ந்து பருத்தி காய்கள் அதிக அளவில் கீழே உதிர்ந்து வருகிறது.

நடவடிக்கை தேவை

இதுகுறித்து நெப்பத்தூரை சேர்ந்த விவசாயி ரகுராமன் கூறுகையில், இந்த ஆண்டு பருத்தி சாகுபடியில், ஈடுபட்டுள்ள விவசாயிகள், தற்போது பஞ்சு விலை அதிகரித்து காணப்படுவதால், மிகவும் மகிழ்ச்சி அடைந்த நிலையில், கடந்த சில நாட்களாக பருத்தி செடியில் திடீரென தாக்கி வரும் மர்ம நோயால், செடிகள் காய்ந்தும், காய்கள் உதிர்ந்தும் வருகின்றன. இந்த நோயை கட்டுப்படுத்த (Control) எந்தவிதமான மருந்து தெளிக்க வேண்டும் என தெரியாமல் தவித்து வருகிறோம்.

எனவே வேளாண்மை துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டுகிறேன். கடந்த சில நாட்களாக விவசாயிகள் தங்கள் வயல்களில் பருத்தி பஞ்சு எடுத்து வரும் நிலையில், கிலோ ரூ.62 வரை விலை போவதால், இந்த ஆண்டு லாபம் கிடைக்கும் என நினைத்திருந்த வேளையில், பருத்தி செடிகளில் மர்ம நோய் தாக்கி வருவது மனவேதனை அளிக்கிறது.

மேலும் படிக்க

தர்பூசணி விற்பனை செய்ய முடியவில்லை: வயலுக்கே உரமாகும் அவல நிலை!

வேளாண்துறையின் முழுமையான வழிகாட்டுதல் இருந்தால் காய்கறிகள் வீணாகாது!

English Summary: Mysterious disease attack on cotton! Farmers demand action!
Published on: 21 June 2021, 08:19 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now