மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 May, 2019 4:05 PM IST

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி நேற்று ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டது.  அதில் ரூ 700 கோடி வரையிலான முதலீடு செய்ய முன் வந்துள்ளது. வேளாண், உணவு மற்றும்  கிராமப்புற வளர்ச்சி  போன்றவற்றிற்காக  ரூ 700 கோடி முதலீடு ஒதுக்கீடு செய்துள்ளது.

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியானது கிராமப்புற மேம்பாட்டிற்காகவும், வேளாண்துறையில் முன்னேற்றம் அடையவும் உதவ முன் வந்துள்ளது. அதன்படி  தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி வேளாண், உணவு, போன்ற துறை சார்ந்தவர்கள், மற்றும் அந்த துறையினில் தொழில் தொடங்க முன் வருபவர்களை ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

கிராமப்புற வளர்ச்சிக்காகவும், வேளாண்துறை வளர்ச்சிக்காகவும் ரூ 500 கோடி வரை முதலீடு வழங்க செய்ய முன்வந்துள்ளது. மேலும் தேவை இருப்பின் ரூ 200 கோடி வரை முதலீடு செய்யும் என அந்த வங்கியின் இயக்குனர் ஹர்ஷ் குமார் பன்வலா கூறினார்.

இதற்கு தேவைப்படும் நிதியினை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள  முதலீட்டாளர்களிடம் இருந்து பெற திட்டமிட்டுள்ளதாக கூறி உள்ளது.  மேலும் இது போன்ற முதலீடுகள் இந்த தொழில் ஈடுபட்டவர்களுக்கும், ஈடுபட நினைப்பவர்களுக்கும் ஊக்கமாக இருக்கும். வேளாண்துறையிலும், உணவுத்துறையிலும், கிராமப்புற மேம்பாட்டிலும், மக்களின் வாழ்க்கைத்தரத்திலும்  நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி இதுவரை 16 நிறுவனங்களில், சுமார் ரூ 273 கோடி வரை முதலீடு செய்துள்ளது. இப்போது இந்த வங்கியானது கிராமப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்துறையில் புதிய யுக்தி  போன்றவைகளில்  அதிக கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளது.  

English Summary: NABARD Announce Rs 700 Crore: Allocated For Agriculture And Rural Startup: Boost Ecosystem
Published on: 14 May 2019, 04:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now