மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 July, 2022 5:39 PM IST
National Organic Farming Seminar in Ooty!

ஊட்டியில் இயற்கை வேளாண்மை குறித்து தேசிய கருத்தரங்கம் நடந்தது. இதில் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடினர். இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் மண் மற்றும் நீர் பாதுகாப்பு நிறுவனம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இயற்கை மற்றும் நீடித்த வேளாண் மையம் சார்பில், பருவநிலை சார்ந்த இயற்கை பண்ணையம் மற்றும் நீடித்த வேளாண்மை என்ற தலைப்பில் ஊட்டியில் 2 நாட்கள் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராம கதிரேசன் தலைமை தாங்கினார்.

தேசிய கருத்தரங்கம் (National Seminar)

மண் மற்றும் நீர் பாதுகாப்பு மைய இயக்குனர் எம்.மது பேசினார். இதில் பெங்களூரு இயற்கை வேளாண் மைய மண்டல இயக்குனர் த.ரவீந்திர குமார், கொல்கத்தா இந்திய புவியியல் மற்றும் அளவை மைய முன்னாள் இணை பொது இயக்குனர் ஜெயபாலன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர்.

கலந்துரையாடல் (Discussion)

தேசிய அளவிலான விவசாய கருத்தரங்கில் நாடு முழுவதிலும் இருந்து இயற்கை வேளாண் சார்ந்த தலைப்புகளில் பல்வேறு விஞ்ஞானிகள் கலந்துகொண்டு பேசினர். மேலும் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வேளாண் அறிவியல் நிலையங்கள் மூலம் இணைய வழியிலும் ஊட்டியை சேர்ந்த முன்னோடி விவசாயிகள் 50 பேர் கலந்துகொண்டு விஞ்ஞானிகளுடன் தங்களது இயற்கை வேளாண் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மைய பேராசிரியர் கண்ணன், இயற்கை மற்றும் நீடித்த வேளாண்மை மையத்தின் இயக்குனர் ராமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். பின்னர் விவசாயிகள் இயற்கை வேளாண் பண்ணையையும் நேரடியாக பார்வையிட்டனர். அவர்களுக்கு களப்பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க

கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், விவசாயிகள் போனில் புகார் அளிக்கலாம்!

மானிய விலையில் கத்தரி, மிளகாய் செடிகள்: அரசு தோட்டக்கலைத்துறை அறிவிப்பு

English Summary: National Organic Farming Seminar in Ooty
Published on: 25 July 2022, 05:39 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now