News

Sunday, 16 January 2022 11:26 AM , by: R. Balakrishnan

National start-up day

ஜனவரி 16 ஆம் தேதி தேசிய ஸ்டார்ட் அப் தினமாக கடைபிடிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) அறிவித்துள்ளார். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் கலந்துரையாடினார்.

தேசிய ஸ்டார்ட் அப் தினம் (National Start Up Day)

நாட்டின் அனைத்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் வாழ்த்துகள். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான கொள்கைகளில் அரசு பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

இனி வரும் காலங்களில் ஜனவரி 16 தேசிய ஸ்டார்ட் அப் தினமாக கடைபிடிக்கப்படும். மக்களின் ஆற்றலை தேசம் அங்கிகரித்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், புதிய இந்தியாவின் முதுகெலும்பாக மாறி உள்ளது. இந்தியா 100 ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, ஸ்டார்ட் அப்கள் முக்கிய பங்கு வகிக்கும்.

நாட்டின் புதிய கண்டுபிடிப்பாளர்கள், சர்வதேச அளவில் தேசத்தை மிளிர செய்கின்றனர். இந்த தசாப்தம் இந்தியாவின் தசாப்தமாக மாறியுள்ளது என்று பிரதமர் மோடி பேசினார்.

மேலும் படிக்க

மத்திய அரசு வெளியிட்டுள்ள பூஸ்டர் டோஸ் பற்றிய முக்கிய தகவல்!

அரசு ஊழியர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)