நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 March, 2022 9:29 AM IST
National Water Award for Tamil Nadu

தேசிய அளவில், நீர் மேலாண்மையில், தமிழகம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. மேலும், ஆறு பிரிவுகளில், தேசிய நீர் விருதுகளை பெற்றுள்ளது. மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் சார்பில், ஆண்டுதோறும் தேசிய நீர் விருது வழங்கப்படுகிறது. நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களை தேர்வு செய்து, விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, நேற்று டில்லியில் நடந்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத் ஆகியோர் விருதுகளை வழங்கினர்.

தேசிய நீர் விருது (National Water Awrd)

உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழகம் ஆகியவற்றுக்கு, முதல் மூன்று இடத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டன. தமிழகத்திற்கான விருதை, தமிழக நீர் வளத் துறை கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா, நீர் வளத் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி ஆகியோர் பெற்றனர்.
தென் மண்டல அளவில், சிறந்த கிராம பஞ்சாயத்துக்கான விருதுகளில், செங்கல்பட்டு மாவட்டம், வெள்ளப்புத்துார் ஊராட்சி, இரண்டாம் இடத்திற்கான விருதை பெற்றது.

சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரிவில், மதுரை மாநகராட்சிக்கு, மூன்றாம் இடத்திற்கான விருது; சிறந்த பள்ளிகள் பிரிவில், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு, முதல் இடத்திற்கான விருதும் கிடைத்தன.

சிறந்த தொழில் பிரிவில், தமிழகத்தில் உள்ள 'ஹூண்டாய் மோட்டார்' நிறுவனம்; சிறந்த தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவில், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா ஆகியவை, இரண்டாம் இடத்திற்கான விருதுகளை பெற்றன.

மேலும் படிக்க

வனத்தில் வசிக்கும் மக்களுக்கு மலையளவு பிரச்னைகள்: கண்டுகொள்ளாத அரசு!

நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும்: விவசாயிகள் வேண்டுகோள்!

English Summary: National Water Award for Tamil Nadu: Third place in water management!
Published on: 30 March 2022, 09:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now