நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 March, 2022 2:25 PM IST
Nationwide farmers protest on March 21

மத்திய அரசின் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, விவசாயிகள் கூட்டமைப்பினர் மார்ச் மாதம் 21ல் தேசிய அளவில் போராட்டம் அறிவித்து உள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்தம், 40 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான 'சம்யுக்த கிசான் மோர்ச்சா'வின் தொடர் போராட்டத்தால் திரும்ப பெறப்பட்டது. அப்போது, மத்திய அரசின் சார்பில் வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான குழு அமைப்பது, விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

விவசாயிகள் போராட்டம் (Farmers Protest)

இந்நிலையில், சம்யுக்த கிசான் மோர்ச்சா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் டில்லியில் நேற்று நடைபெற்றது. இதில், வாக்குறுதிகள் நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து, 21ம் தேதி தேசிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில், தலைநகரில் விவசாயிகள் ஓராண்டாக வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தினர். பிறகு, மத்திய அரசும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அளித்து, விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

தற்போது வரை மத்திய அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனைக் கண்டித்து வருகின்ற மார்ச் 21 ஆம் தேதி தேசிய அளவில் போராட்டம் நடத்த இருக்கின்றனர்.

மேலும் படிக்க

மாட்டுத்தீவன மானியம் நிறுத்தம்: அதிர்ச்சியில் பால் உற்பத்தியாளர்கள்!

பசுவில்லாத பால்: அதே மணம், சுவை: உடலுக்கு நல்லதா?

English Summary: Nationwide protest on March 21: Farmers' Union announcement!
Published on: 15 March 2022, 02:25 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now