மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 August, 2021 12:51 PM IST
Apply for certification

நஞ்சில்லா உணவு உற்பத்தியில் தமிழ்நாடு இயற்கை விவசாய தரச்சான்றளிப்புத் துறையின் பங்கு மிக முக்கியமானது. தரச்சான்று பெற்று உற்பத்தி செய்யப்படும் இயற்கை வேளாண் விளை பொருட்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். எனவே திருவள்ளுர் மாவட்டத்தில் இயற்கை விவசாயம் (Natural Agriculture) செய்யும் விவசாயிகள் தனிநபராகவோ, குழுவாகவோ, வணிக நிறுவனமாகவோ பதிவு செய்துகொள்ளலாம். இயற்கை விளைபொருட்களை பதன் செய்வோரும், ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்யலாம்.

பார்த்தீனிய களையை அழிக்க உதவும் மெக்சின் வண்டுகள்

அங்ககச் சான்று (Organic proof)

நாம் நமது அடுத்த தலைமுறைக்கு மாசற்ற வேளாண் முறையை தருவதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியமான உணவுக்கும் வழிவகை செய்ய அங்ககச் சான்று பெறுவது மிகவும் அவசியமாகிறது.

தரச்சான்றிதழ் (Certification)

எனவே, விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் விளை பொருட்களுக்குத் தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறையால் குறைந்த கட்டணத்தில் தரச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இயற்கைத் தன்மை (Naturalness)

இயற்கை முறையில் விளை விக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும்பொழுது அவற்றிற்கான தரச்சான்று இருக்கும் பட்சத்தில் அதன் இயற்கைத் தன்மை உறுதி செய்யப்படுகிறது.

ஏற்றுமதி வாய்ப்பு (Export opportunity)

தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையால் அளிக்கப்படும் தரச்சான்றிதழ், மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் மூலம் அங்கக உற்பத்திக்கான தேசிய திட்டத்தின்படி அளிக்கப்படுகிறது. இந்த தரச்சான்றிதழ் மூலம் விளைவிக்கப்படும் அங்கக விளைபொருட்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.

தொடர்புக்கு

பதிவு செய்ய விரும்புவோர் உரிய பதிவு கட்டணம் செலுத்தி தரச்சான்று பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு திருவள்ளுர், பெரியகுப்பம், 6/24, லால் பகதூர் சாஸ்திரி தெருவிலுள்ள விதைச்சான்று மற்றும் இயற்கை விவசாய தரச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என உதவி இயக்குநர் நா.ஜீவராணி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

தமிழக அரசின் பயிர்கடன் அறிவிப்பு! விவசாயிகள் ஆனந்தம்

English Summary: Natural farmers can apply for certification!
Published on: 26 August 2021, 12:51 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now