மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 February, 2021 2:10 PM IST
Credit Dinamalar

சென்னை மாநகராட்சி, குப்பையை சரியான முறையில் கையாள பலவேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனடிப்படையில், குப்பைகளை (Dust) தரம் பிரித்து, இயற்கை உரங்கள் தயாரிக்க முன்வந்துள்ளது. சென்னை மாநகராட்சி. மட்கும் மற்றும் மக்காத குப்பைகளை சிறப்பான முறையில் கையாளப்படுவதோடு, விவசாயத்திற்கும் இயற்கை உரம் (Natural Compost) கிடைக்கிறது. இதற்காக இயற்கை உரம் தயாரிப்பு கூடங்களை சென்னையில் துவக்கி வருகிறார்கள்.

இயற்கை உரம் தயாரிப்பு கூடம்

வேளச்சேரியில் அமைக்கப்பட்ட, 'நானோ (Nano)' என்ற சிறிய வகை, இயற்கை உரம் தயாரிப்பு (Natural fertilizer production) கூடம், நேற்று திறக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி, குப்பையை கையாள பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, மக்கும் குப்பையில் இருந்து, இயற்கை உரம், எரிவாயு, தேங்காய் நார் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. பொதுமக்கள், வீட்டு குப்பையை தரம் பிரித்து வழங்குவதில், பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இதனால், குறிப்பிட்ட இடத்தில், 'நானோ' என்ற சிறிய வகை, இயற்கை உரம் தயாரிப்பு கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதலில், அடையாறு மண்டலத்தில், 182வது வார்டில் துவங்கப்பட்டது. இதையடுத்து, 177வது வார்டு, வேளச்சேரி, ஏரிக்கரை சாலையில், 5 லட்சம் ரூபாய் செலவில், இயற்கை உரம் தயாரிப்பு கூடம் அமைக்கப்பட்டது.

விழிப்புணர்வு ஓவியம்

இயற்கை உரக் கூடத்தை அழகுபடுத்த, டயரில் பூந்தொட்டிகள், சுவரில் விழிப்புணர்வு ஓவியம் (Awareness painting), துர்நாற்றம் வீசாமல் இருக்க காற்றோட்ட வசதி போன்ற அம்சங்களுடன் அமைக்கப்பட்டது. நேற்று, தெற்கு வட்டார துணை ஆணையர் ஆல்பிஜான் வர்கீஸ், இயற்கை உரம் தயாரிக்கும் கூடத்தை திறந்து வைத்தார். இங்கு, வீட்டில் தரம் பிரித்த மக்கும் குப்பை வாங்கப்படும். இயற்கை உரம் விற்பனையும் (Sales) நடைபெற உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

உரச்செலவை குறைத்து விளைச்சலை அதிகரிக்க உதவும் பசுந்தாள் உரத்தின் பயன்கள்!

ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி!

English Summary: Natural fertilizer factory opens in Chennai Natural compost from the trash!
Published on: 18 February 2021, 02:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now