மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 February, 2021 9:04 AM IST
Credit : Dinamalar

இந்தியன் ஆயில், சென்னை பெட்ரோலிய நிறுவனம் இணைந்து, நாகை மாவட்டத்தில், 31 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் செலவில் அமைக்க உள்ள, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு, பிரதமர் நரேந்திர மோடி, இன்று(பிப்.,17) அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசுகையில், இயற்கை எரிவாயுவை (Natural gas), ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

சூரிய மின்உற்பத்திக்கு ஊக்கம்!

இந்தியாவில், எரிசக்தி தேவை அதிகரித்து வருகிறது. உள்நாட்டு தேவையை நிறைவு செய்ய 85 சதவீத எரிபொருள் இறக்குமதி (Energy imports) செய்யப்படுகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் உள்நாடு, வெளிநாடு முதலீடுகளை (Investment) ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் மூலம் தென் இந்தியாவில் பல்வேறு பகுதிகள் பயன்பெறும். மாற்று எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க சூரிய மின்உற்பத்திக்கு (Solar power generation) ஊக்கம் அளிக்கப்படுகிறது. எல்இடி பல்புகளை பயன்படுத்துவதன் மூலம் மின்சாரதேவை குறைக்கப்பட்டு வருகிறது. சூரிய மின்சாரத்தில் இயங்கும் மோட்டார்கள் (Solar motors) விவசாயிகளுக்கு உதவியாக இருக்கின்றன.

இந்தியாவில் அதிரிக்கும் எரிசக்தி தேவையை சமாளிக்க மாற்று எரிசக்திகள் உதவியாக இருக்கும். இந்தியாவின் முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் (Metro Rail) சேவை துவங்கப்பட்டுள்ளது. சுத்தமான மற்றும் பசுமையான எரிசக்திக்காகவும், எரிசக்திக்காக மற்ற நாடுகளை சார்ந்திருப்பதை குறைக்கவும் அதற்காக உழைப்பது நமது அனைவரின் கடமை. கடந்த 2019-2020ம் ஆண்டில், உள்நாட்டின் தேவைக்காக இந்தியா 85 சதவீத எண்ணெய் மற்றும் 53 சதவீத இயற்கை எரிவாயுவை (Natural gas) இறக்குமதி செய்தது.

விவசாயிகளுக்கு உதவ எத்தனால் பயன்பாடு:

விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கு உதவ எத்தனால் (Ethanol) பயன்பாட்டை அதிகரிக்க இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. எரிசக்தி துறையில் இந்தியா தலைமை இடத்தை வகிக்க, சோலார் எரிசக்தியில் கவனம் செலுத்தி வருகிறோம். மக்களின் வாழ்க்கை எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக, பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என ஊக்கப்படுத்தி வருகிறோம். இயற்கை எரிவாயுவை, ஜிஎஸ்டி (GST) வரம்பிற்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

சிறு, குறு தொழில் முனைவோருக்கு ஜாக்பாட்! முதலீட்டு மானியம் 3 மடங்காக அதிகரிப்பு!

எதிர் கட்சிகளின் பொய் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்..! 'வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பலன் மட்டுமே உண்டு! - பிரதமர் மோடி பேச்சு!

English Summary: Natural gas within the GST range! Prime Minister Modi informed!
Published on: 17 February 2021, 08:36 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now