மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 January, 2021 4:51 PM IST
Credit : YouTube

கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனி (MS Dhoni), அதன் பிறகு முழுநேர விவசாயியாக மாறினார். ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் 10 ஏக்கர் விவசாய நிலத்தில் அவர் இயற்கை முறைப்படி பப்பாளி (Papaya), வாழை (Banana) ஆகியவற்றை பயிரிட்டு வளர்த்து வந்தார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்னர் வரை அவர் தனது பண்ணை வீட்டில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உரத்தின் மூலமாக விவசாயம் செய்வது குறித்த பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

துபாய்க்கு ஏற்றுமதி:

இயற்கை முறையில் தோனி விவசாயம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், செயற்கையான பூச்சிக்கொல்லி மருந்துகளால் இருக்கும் ஆபத்து குறித்தும் அவ்வப்போது வீடியோவில் பேசி வருகிறார். தற்போது தான் இயற்கை முறையில் பயிரிட்ட காய்கறிகளான தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை துபாய்க்கு ஏற்றுமதி (Export) செய்வதற்காக ஜார்கண்ட் (Jharkhand) அரசிடம் கோரிக்கை வைத்தார். அவர்களும் அவரது கோரிக்கையை ஏற்று துபாய்க்கு காய்கறிகளை ஏற்றுமதி செய்ய முன்வந்துள்ளனர். மேலும் தங்களது வேளாண்மை துறை மூலம் இதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தோனி இயற்கை முறையில் உரத்தை (Organic Fertilizer) பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட காய்கறிகள் ஏன் துபாய்க்கு அனுப்பப்படுகின்றன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தொழில் தொடங்க உலக நாடுகளுக்கு அழைப்பு:

ஜார்கண்ட் மாநிலத்தில் தொழில் தொடங்க எந்த உலக நிறுவனங்களும் முன் வருவதில்லை என்ற காரணத்தினால், தோனி செய்யும் இந்த செயல் மூலம் உலக நாடுகள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொழில் (Business) தொடங்க முன்வரும் என்ற காரணத்தினாலேயே அவர் இங்கிருந்து காய்கறிகளை ஏற்றுமதி செய்கிறார். மேலும் அவர் செய்யும் இந்த விவசாயத்தின் மூலம் வரும் விளைச்சலைப் பொறுத்து அனைத்து விவசாயிகளுக்கும் இயற்கை முறை உரத்தில் உள்ள நன்மையை கொண்டு சேர்க்கும் வகையிலும், உரம் விற்பனையையும் தோனி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இயற்கையான முறையில் பயிரிடப்படும் இந்த காய்கறிகளின் விளைச்சலை இங்கிருக்கும் விவசாயிகளிடம் கொண்டு செல்லும் நல்ல எண்ணம் காரணமாகவும் டோனி இதனை செய்துள்ளார் தற்போது அவர் எதிர்பார்த்தது போலவே அவரது தோட்டத்தில் காய்கறிகள் நல்ல விளைச்சலை தர துவங்கியுள்ளதால் விரைவில் அவர் விவசாயிகளின் நலனுக்காக உர விற்பனையையும் (Fertilizer Sales) துவங்குவார் என்று கூறப்படுகிறது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

சிலிண்டர் புக் செய்ய மிஸ்டு கால் வசதி! இண்டேன் அறிமுகம்!

ருசியான தரமான நாட்டுக்கோழி வளர்க்க வேண்டுமா? சில தகவல்கள் இங்கே!

English Summary: Natural vegetables produced by Dhoni exported to Dubai! What is the reason?
Published on: 03 January 2021, 04:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now