சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 3 June, 2019 10:36 AM IST

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய மக்கள் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. மோடி தலைமையிலான அரசு புதிய அமைச்சர்களுடன் இணைந்து நாட்டு மக்களுக்கு சில நல திட்டங்களை அறிவித்துள்ளது.

15 கோடி விவசாகிகளுக்கு ரூ 6000 /- நிதியுதவி   

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் விவசாகிகளுக்கு ரூ 6000 /- நிதியுதவி திட்டத்தினை அறிவித்தது. 2 ஏக்கர் பரப்பளவுக்கு கீழ் நிலம் வைத்திருப்பவர்கள் இத்திட்டத்தினால் பயன் அடைந்தார்கள். இதன் மூலம் நாடு முழுவதிலும் இருந்து 12 கோடி விவசாகிகள்  நிதியுதவி பெற்றனர்.

மீண்டும் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, மேலும் அதிக அளவிலான விவசாகிகள் பயன் பெறும் வகையில் சிறு மற்றும் குறு விவசாகிகள்   பயன் பெறும் வகையில் இத்திட்டம் இருக்கும் என அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 15 கோடி விவாசகிகள் பயனடைய உள்ளனர்.

புதிய ஓய்வூதிய திட்டம்

சிறு மற்றும் குறு விவசாகிகளுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தினை அறிவித்தார். அதன்படி 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைத்து விவசாகிகளும் இதில் இணையலாம். அவர்கள் செலுத்தும் பிரிமியம் தொகைக்கு இணையான தொகையினை அரசும் செலுத்தும். 60 வயதுக்கு பிறகு மாதம் ரூ 3000 /- ஓய்வூதியமாக வழங்கப்படும். இதே போன்று சிறு வியாபாரிகளும் இத்திட்டத்தில் இணையலாம்.

கல்வி உதவித்தொகை

வீரமரணம் அடைத்த படைவீரர்களின் குழந்தைகளுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. தற்போது இந்த உதவித்தொகையினை உயர்த்தி உள்ளது. அதன்படி மரணமடைந்த வீரர்களின் பெண் குழந்தைகளுக்கு  உதவித்தொகையாக ரூ 2500 /- இல் இருந்து  ரூ 3000/-  ஆக உயர்த்தி உள்ளது. அதே போன்று ஆண் குழந்தைகளுக்கு ரூ 2000 /- இல் இருந்து ரூ 2500 /- ஆக உயர்த்தியுள்ளது.

மாநிலங்களின் பாதுகாப்புக்காக உயிரிழக்கும் காவல் துறையினருக்கும் விரைவில் இத்திட்டத்தினை அறிமுக படுத்த திட்டமிட்டுள்ளது.

Anitha Jegadeesan

Krishi Jagran 

English Summary: NDA Govt Announced Pension Scheme For Farmers: Expecting 15 Crore Would Be Beneficiaries: Revised Martyr Children Scholarship
Published on: 03 June 2019, 10:36 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now