நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 6 August, 2022 5:10 AM IST
Coconut farmers demand

விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய்க்கு போதிய விலை வேண்டியும், தமிழக அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் நால்ரோட்டில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் எஸ்.பரமசிவம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகள் கோரிக்கை (Farmers Demand)

விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தின் போது, கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.140க்கு கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், கேரளாவைப் போல முழு தேங்காய் கிலோ ரூ.50க்கு கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கொள்முதல் செய்திட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். அதேபோல, அனைத்து தென்னை மரங்களுக்கும் பயிர் காப்பீடு வழங்கிட வேண்டும் எனவும், அனைத்து விவசாயிகளுக்கு முழு மானியத்தில் சொட்டுநீர் பாசன திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தென்னைக்கு பயிர் காப்பீடு (Crop Insurance for Coconut)

தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகத்தை மீண்டும் கோவையில் அமைத்திட வேண்டும்; தென்னை சார்ந்த உப தொழில் வளர்ச்சியை உருவாக்கிட வேண்டும்; உரம், பூச்சி மருந்து, இயந்திரங்கள் முழு மானியத்துடன் வழங்கிட வேண்டும்; தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடை மூலம் மானிய விலையில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; நல்லாறு, ஆனைமலையாறு அணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் முழக்கம் எழுப்பினர்.

இந்தப் போராட்டத்தில் தென்னை விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காயை சாலையில் உடைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு ஏற்று, நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் படிக்க

நெல்லை அரிசியாக மாற்றும் சிறிய இயந்திரம்: விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்!

தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தில் மானியம்: விவசாயிகளுக்கு அழைப்பு!

English Summary: Need crop insurance for coconut: farmers demand!
Published on: 06 August 2022, 05:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now