News

Wednesday, 10 April 2019 05:50 PM

நீட் தேர்வு தமிழர்களால் பெரிதும் பேசப்பட்டவை. இந்த வருடத்திற்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 5 ஆம் தேதி நாடு முழுவதும்  நடைபெற உள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வினை  மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நடத்துகிறது. அரசு மற்றும்  தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்புவோருக்கு இது பொதுவான தேர்வாகும். நாடு முழுவதிலும் இருந்து இந்த  தேர்வுக்காக  சுமார் 15 லட்சத்து அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம்  மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

நீட்தேர்வுக்காண விண்ணப்பபடிவம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பொது பிரிவில் 25 வயதிற்கு மேற்பட்டோர் இந்த தகுதி தேர்வில் பங்கேற்கலாம்   என நீதி மன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 7 தேதி வரை நீட்டிக்க பட்டது. விண்ணப்பித்த மாணவர்களின்   ஹால்டிக்கெட் தயார் நிலையில் உள்ளதுவரும் 15-ம்தேதி முதல் மாணவர்கள்  இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என (NTA) செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்வானது வரும் மே மாதம் ௫ ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்வுக்கான முடிவுகள் ஜூன் 5 ஆம் தேதி வெளியிடப்படும் என (NTA)  தெரிவித்துள்ளது. மாணவர்கள் தேர்வினை அவர்களது தாய்மொழில்  எழுத ஏதுவாக கேள்வித்தாள்கள் 11 மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளதுதமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அசாம், வங்காளம், உருது ஆகிய  மொழிகளில் கேள்வித்தாள்கள் தயாரித்துள்ளனர்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)