News

Thursday, 10 August 2023 04:21 PM , by: Yuvanesh Sathappan

new application from tamilnadu cybercrime to find lost mobiles

தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு தகவல் தொடர்பு அமைச்சகத்துடன் இணைந்து திருடப்பட்ட மொபைல் போன்களைக் கண்டறிய உதவும் புதிய செயலியை தொடங்கியுள்ளது.

துளைத்த மொபைல் போன்களை கண்டுபிடிக்க புதுமுயற்சியாக தொலைத்தொடர்புத் துறையால் உருவாக்கப்பட்ட KYM (know your mobile) - மொபைல் செயலியை (ஆப்) பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

KYM என்று டைப் செய்து பின் IMEI எண்ணை டைப் செய்து “14422” க்கு SMS அனுப்புவதன் மூலம் அல்லது Google Play store இல் கிடைக்கும் KYM ஆப் மூலம் இதைச் சரிபார்த்து உங்கள் மொபைல் போனை கண்டறியலாம்.

தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைல்களைக் கண்டறிய, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் CEIR [Central Equipment Identity Register]உள்நுழைவு ஐடியை உருவாக்கும் பணியை DoT உடன் இணைந்து TN சைபர் கிரைம் பிரிவு மேற்கொண்டுள்ளது.

இந்தப் பயன்பாடு எந்த மொபைலையும் அதன் IMEI எண் மூலம் சரிபார்க்கும். மொபைல் சாதனத்தை வாங்கும் போது, KYM ஆப் மூலம் மொபைல் சாதனங்களின் உண்மையான தன்மையை சரிபார்க்க முடியும்.

செய்தி சுருக்கம்

தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு தகவல் தொடர்பு அமைச்சகத்துடன் இணைந்து திருடப்பட்ட மொபைல் போன்களைக் கண்டறிய உதவும் புதிய செயலியை தொடங்கியுள்ளது. Google Play store இல் கிடைக்கும் KYM ஆப் மூலம் இதைச் சரிபார்த்து உங்கள் மொபைல் போனை கண்டறியலாம். இதனால் வாங்கிய புதிய மொபைல் போன் உண்மையானதா இல்லை நகலா என்பதையும் கண்டறியலாம்.

மேலும் படிக்க

"பிங்க் வாட்ஸ்அப்" மோசடி லிங்கை தொட்டா மொத்த பணமும் காலி! உஷார்!

யப்பாடா.. 3 ரக தக்காளியும் கிலோவுக்கு ரூ.80 வரை அதிரடி குறைவு

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)