நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 March, 2022 2:34 PM IST
New Elephant Prevention Program

சென்னை - கோவை பாலக்காடு ரயில் பாதையில், யானைகள் உயிரிழப்பை தடுக்க, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய தடுப்பு அமைப்பை உருவாக்க இருப்பதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பான பி.எப்.சி.ஐ., சார்பில், 2020-ல், பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில், 'கோவை - பாலக்காடு பாதையில் ரயிலில் அடிபட்டு, யானைகள் பலியாவதை தடுக்க, தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்' எனக் கூறப்பட்டிருந்தது. விசாரித்த தீர்ப்பாயம், யானைகள் குறுக்கிடுவதை முன்கூட்டியே கண்டறிந்து, ரயில் ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, ரயில்வே மற்றும் வனத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

புதிய திட்டம் ( New Project)

வனத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், 'கோவையில் இருந்து கேரளத்தை இணைக்கும் ரயில் தடம் அமைந்துள்ள பகுதிகளில், 470 ஏக்கர் பரப்பில் யானைகள் வாழ்கின்றன. யானைகளால் ஏற்பட்ட பயிர் சேதம், மனித உயிர் இழப்புகளுக்கு, 2015 - 2020 வரை, 5.15 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 'யானைகள் பலியாவதை தடுக்க, கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

புதிகாக நான்கு கண்காணிப்பு கோபுரங்கள் விரைவில் நிறுவப்படும்' என கூறப்பட்டுள்ளது. பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளர் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை - பாலக்காடு ரயில் பாதையில், யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்து, முன்கூட்டியே இரயிலின் வேகத்தை குறைக்க, இரயில் ஓட்டுனர்களை எச்சரிக்கும் தடுப்பு அமைப்பை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை, பிப்ரவரி 24-ல் விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி கே.ராமகிருஷ்ணன், நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், 'செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம், யானைகள் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்டறிவது, எந்த அளவுக்கு சாத்தியமாகும்? 'அதை நடைமுறைப்படுத்த எவ்வளவு அவகாசம் தேவை என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, தெற்கு ரயில்வே மற்றும் வனத் துறைக்கு உத்தரவிட்டனர். விசாரணையை, வரும் 15-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

மேலும் படிக்க

கூடுதல் அறுவடை எந்திரங்களை குறைந்த வாடகையில் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!

உவர்நிலத்தை வளமான விளைநிலமாக்கும் அதிசய செடி!

English Summary: New Elephant Prevention Program: Coming Soon!
Published on: 05 March 2022, 02:34 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now