நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 20 May, 2023 11:34 AM IST
Ration Card SMS Facility

ரேசன் கடைகளுக்கு சென்று வாங்குவதில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சிரமம் ஏற்படக் கூடாது என்று நடமாடும் நியாய விலைக் கடைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த சூழலில் எஸ்.எம்.எஸ் மூலம் விவரங்களை பெறும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருப்பதாக சிவில் சப்ளை துணை ஆணையர் சண்முகவேல் தெரிவித்துள்ளார்.​

எஸ்எம்எஸ் சேவை (SMS Service)

நியாய விலைக் கடைகளில் பதிவு செய்து வைத்துள்ள மொபைல் எண்ணில் இருந்து PDS 102 எனக் குறிப்பிட்டு 9773904050 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும். இதன்மூலம் நியாய விலைகள் அன்றைய தினம் திறந்துள்ளதா? இல்லை மூடியிருக்கிறதா? எனத் தெரிந்து கொள்ளலாம். மேலும் PDS 101 எனக் குறிப்பிட்டு 9773904050 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் நியாய விலைக் கடையில் என்னென்னெ பொருட்கள் இருப்பு உள்ளது எனப் பதில் மெசேஜ் வரும்.

அதற்கேற்ப கடைகளுக்கு சென்று வாங்கலாமா? எந்தப் பொருளை வாங்க வேண்டும்? போன்ற விஷயங்களை முடிவு செய்து கொள்ளலாம். இந்த புதிய வசதியின் மூலம் நியாய விலைக் கடைகளுக்கு கையில் பையுடன் சென்று ஏமாற்றம் அடைந்து வருவதை தடுக்க பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் ராஜாராமன் ஐஏஎஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள பொருட்களை கடத்துவது, பதுக்குவது பெரிய குற்றமாகும். மீறி நடந்தால் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாத பொருட்கள் சட்டம் 1980ன் கீழ் தண்டிக்கப்படுவர்.​

புகார் அளிக்க

பொது விநியோகத் திட்ட பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்குதல் தொடர்பான புகார்களுக்கு 18005995950 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட இரண்டு வசதிகளும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிகிறது.

மேலும் படிக்க

PF பணம் எடுக்கும் போது வரி செலுத்த வேண்டுமா? விதிமுறைகள் சொல்வது என்ன?

1.08 லட்சம் கோடி உர மானியம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு!

English Summary: New facility for ration card holders: now only SMS is enough!
Published on: 20 May 2023, 11:34 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now