மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 September, 2022 11:35 AM IST
Bus

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் சுமார் 6,000 பேருந்துகளில் ஜியோ கோட்டிங் செய்து பேருந்து நிறுத்தங்களை கண்டறியும் வசதி இரண்டு வருடங்களுக்கு முன்பே நிறைவு பெற்றுள்ளது. ஆனால் தற்போது 500 பேருந்துகளில் அந்த அமைப்புகளை நிறுவும் பணி தொடங்கி இருக்கின்றது. இதற்காக ஒவ்வொரு பேருந்துகளிலும் ஆறு ஸ்பீக்கர்கள் பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக மாநகரப் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளது.

புதிய வசதி (New Facility)

முதற்கட்டமாக ஆயிரம் பேருந்துகளில் பேருந்து நிறுத்தங்களை அறிவிப்பதற்கான அமைப்புகளை நிறுவும் பணி தொடரும் அதன் பின் படிப்படியாக அனைத்து பேருந்துகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் முதற்கட்டமாக அடுத்த பேருந்து நிறுத்தம் குறித்து அறிவிப்புகள் தமிழில் மட்டுமே அறிவிக்கப்படும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு பிறகு மேம்படுத்தப்படும்போது ஆங்கிலத்திலும் அறிவிக்கும் விதமாக மாற்றம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த அறிவிப்பானது ஒரு பேருந்து நிறுத்தம் வருவதற்கு 200 முதல் 250 மீட்டர் தொலைவில் இருக்கும் போது பேருந்தில் அறிவிக்கப்படும் விரைவில் அனைத்து விதமான பேருந்துகளிலும் இந்த வசதி வந்துவிடும் என கூறப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த வசதி முதற்கட்டமாக 37 ஜி என்னும் பேருந்தில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. சென்னையில் மொத்தமாக 602 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றது அதில் 626 நிறுத்தங்கள் இருக்கின்றது.

இரண்டு பேருந்து நிறுத்தங்களுக்கு இடையே சராசரியாக 500 முதல் 600 மீட்டர் இடைவெளி இருக்கும் இந்த நிலையில் தற்போது 200 முதல் 250 மீட்டருக்கு முன்பே பேருந்து நிறுத்தம் குறித்து அறிவிப்பு வெளியாகும்.

மேலும் படிக்க

வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து துறையின் கடும் எச்சரிக்கை..!!

SBI வாடிக்கையாளர்களே உஷார்: திடீர் எச்சரிக்கை விடுத்த வங்கி!

English Summary: New facility in buses like trains: Soon to be introduced.!
Published on: 03 September 2022, 11:35 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now