மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 November, 2020 5:58 PM IST
Credit : Dinamalar

விவசாய நிலங்களில், ஈரப்பதத்தை அளவிடுவது கடினமாக இருந்து வந்த நிலையில், தற்போது கோவையைச் சேர்ந்த 5 விஞ்ஞானிகள் மண்ணின் ஈரப்பதத்தை (Soil moisture) அளவிட புதிய கருவியைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்கள்.

விஞ்ஞானிகளுக்கு விருது:

கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவன விஞ்ஞானிகள் ஐந்து பேருக்கு, தேசிய நீர் விருதை (National Water Award) மத்திய நீர்வள அமைச்சகம் வழங்கியுள்ளது. மத்திய நீர்வள அமைச்சகம் (Central Ministry of Water Resources) 2019-க்கான தேசிய நீர் விருது வழங்கும் விழாவை டில்லியில் (Delhi) நடத்தியது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு (Venkaiah Naidu) பங்கேற்ற இவ்விழாவில், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா ஆகியோர், தேசிய நீர் விருதை, கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவன விஞ்ஞானிகளான ஹரி, புத்திர பிரதாப், முரளி, ரமேஷ்சுந்தர், சிங்காரவேலு ஆகியோருக்கு காணொலி வாயிலாக வழங்கினர். விருதுடன் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது.

மண்ணின் ஈரப்பதம் அளவிடும் கருவி

மண் ஈரப்பதங் காட்டி (Show soil moisture) கருவி கண்டுபிடித்ததற்காக விருது வழங்கப்பட்டுள்ளது. ''விவசாய நிலத்தில் நீர்கட்டுதல், நீர் பாய்ச்சாமல் இருப்பது ஆகியவற்றை முடிவெடுப்பதில் இக்கருவி உதவி புரியும்,'' என, கோவை கரும்பு இனப்பெருக்கு நிலைய முதன்மை விஞ்ஞானி ஹரி கூறினார். இக்கருவியில் மண்ணின் ஈரத்தன்மையை பொறுத்து, வெவ்வேறு வண்ணங்களில் விளக்குகள் (Lights) ஒளிரும். ஒளிரக்கூடிய வண்ணங்களின் மூலம் விவசாயிகள் நீர் கட்டுவதா, வேண்டாமா என முடிவு செய்து கொள்ளலாம்.

குறைந்த விலை அதிக மகசூல்:

ஈரப்பதம் அளவிடும் கருவியைப் பயன்படுத்தி நீர் பாய்ச்சப்பட்ட கரும்பு வயலில் ஏக்கருக்கு 60.4 டன் மகசூலும் (Yield) பயன்படுத்தாத வயலில் 55.8 டன் மகசூலும் கிடைத்துள்ளது. இக்கருவியின் விலை தற்போது 1,500 ரூபாய். இது குறித்த விபரங்களை http://sugarcane.icar.gov.in மற்றும் http://caneinfo.icar.gov.in என்ற இணைய தள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

பயிர் காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 30! காஞ்சிபுரம் வேளாண் மையம் அறிவிப்பு!

விவசாயதுறைக்கு பல கோடி நிதி உதவி! பயன்பெற்ற 2.5 கோடி விவசாயிகள்! பட்டியலிட்ட நிர்மலா சீதாராமன்!

English Summary: New invention to measure moisture in agricultural lands and increase yields! National Water Award for 5 Coimbatore Scientists
Published on: 16 November 2020, 05:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now