நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 August, 2021 3:38 AM IST

கோவிட் ஊரடங்கு காலத்தில் சாலையில் வசிக்கும் வீடற்றவர்களும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு அப்பகுதியில் சென்று வரும் சாமானியர்களே உதவுவர். ஊரடங்கால் மக்கள் தேவையின்றி வெளியே வரத் தடை விதிக்கப்பட்டதால், இவர்களும் ஒரு வேளை உணவுக்கே பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

புதிய திட்டம்

வீடற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு மருத்துவச் சிகிச்சை அளிக்கும், 'அவசர பராமரிப்பு மற்றும் மீட்பு மையம்' என்ற திட்டத்தைச் சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது. திட்டத்தை கடந்த 29ம் தேதி, தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இத்திட்டத்தால் சென்னையில் உள்ள 400க்கும் மேற்பட்ட மனநலம் குன்றியவர்களும் 1,800க்கும் மேற்பட்ட வீடற்றவர்களும் பயனடைவர்.

முதற்கட்டமாக இத்திட்டத்தில் சாலையோரம் வசிக்கும் மக்களை மீட்க ஆறு வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டத்தில் இதுவரை 35 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு தண்டையார் பேட்டை மருத்துவமனையில் உள்ள மீட்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் எட்டு பேர் மையத்திலிருந்து தப்பியுள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது. மையத்தில் உள்ளவர்களுக்கு மனநல மதிப்பீடு மற்றும் கோவிட் சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.

மீட்கப்பட்டவர்களில் 22 பேருக்கு மருத்துவ உதவி (Medical Help) தேவைப்படுகிறது. அவர்கள் மீட்பு மையத்தில் தங்கவைக்கப்படுவர். மீதமுள்ள 5 பேர் விடுதிக்கு அனுப்பப்பட உள்ளனர்.

மேலும் படிக்க

அம்மை நோய் போல எளிதாக பரவும் டெல்டா வைரஸ்: ஆய்வில் தகவல்!

English Summary: New program to help homeless, mentally ill people!
Published on: 01 August 2021, 03:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now