மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 March, 2023 8:36 AM IST
IRCTC New Rules

பொதுமக்கள் பலரும் தொலைதூர பயணத்திற்கு இரயில் பயணத்தை தான் விரும்புகின்றனர். மேலும், இதில் கட்டணமும் குறைவாக இருப்பது இதன் சிறப்பம்சம் ஆகும். இரயில் பயணத்தின் போது தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் ஏற்படுகின்றன. மேலும் பல பயணிகள் தூக்கம் தேவைப்படும் மற்ற நபர்களின் இருப்பை புரிந்து கொள்ள மறந்து விடுகின்றனர். அதனால் தான் ஐஆர்சிடிசி இரவுக்கான விதிகளை வகுத்துள்ளது.

IRCTC விதிகள் (New Rules)

இரவு 10 மணிக்குப் பிறகு, TTE (பயண டிக்கெட் பரிசோதகர்) பயணிகளின் டிக்கெட்டை ஆய்வு செய்ய முடியாது. ஸ்டேஷனில் பயணிகள் ஏறும் போது மட்டும் அவர்களது சீட்டுகளை சரிபார்க்கலாம். அதுவும் மற்ற பயணிகளை தொந்தரவு செய்யாத வண்ணம் இருக்கும். மேலும், கேட்டரிங் ஊழியர்கள் மற்றும் இதர ரயில்வே பணியாளர்களும் இந்த விதி பொருந்தும்.

பயணிகள் இயர்போன் இல்லாமல் சத்தமாக இசையைக் கேட்கவும் அனுமதிக்கப்படவில்லை. குழுவாகப் பயணம் செய்பவர்கள் இரவு 10 மணிக்குப் பிறகு சத்தமாக பேசாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று IRCTC விதிகள் கூறுகின்றன.

இரவு மெல்லிய வெளிச்ச நைட் லைட்டுகள் தவிர மற்ற அனைத்து விளக்குகளும் இரவு 10 மணிக்கு மேல் அணைக்கப்படும். கூடுதலாக, நடுத்தர பெர்த் பயணிகள் சிறிது நேரம் கழித்து தங்கள் பெர்த்துகளை விரித்தால் , கீழ் பெர்த் பயணிகள் புகார் செய்ய முடியாது.

IRCTC விதிகளின்படி இரவு 10 மணிக்கு மேல் ரயில்வே சார்பில் உணவு வழங்கக்கூடாது. இருப்பினும், இரயிலில் இரவு நேரத்திலும் இ-கேட்டரிங் சேவைகள் மூலம் உணவு அல்லது காலை உணவை முன்கூட்டியே ஆர்டர் செய்யலாம்.

இந்த விதிகளை மீறி யாராவது உங்களை தூங்க விடாமல் தொந்தரவு செய்தால் கம்பார்ட்மெண்ட்டில் உள்ள ரயில்வே ஊழியரிடம் தெரிவிக்கலாம். அல்லது அதிகாரபூர்வ வலைதளத்தில் புகார் அளிக்கலாம்.

மேலும் படிக்க

பழைய பென்சன் திட்டம்: மத்திய அரசின் பதில் இதுதான்!

15 நாட்களில் புதிய ரேஷன் அட்டை: கலெக்டர் அதிரடி உத்தரவு!

English Summary: New Rules for Night Train Travel: IRCTC Notice!
Published on: 24 March 2023, 08:36 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now