மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 June, 2022 7:53 AM IST

தமிழகத்தில், ஒமைக்ரான் வைரசின் மாறுபட்ட வடிவங்களான, 'பிஏ4, பிஏ5' வகை வைரஸ்களால், 12 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உறுதி செய்துள்ளார்.

மாதிரிகள்

சென்னை கீழ்ப்பாக்கம், அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், நடைபெற்று வரும் புதிய கட்டடப் பணிகளை அவர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

கடந்த மாதம், 21, 22ம் தேதிகளில் சேகரிக்கப்பட்ட 139 ஆர்.டி.பி.சி.ஆர்., மாதிரிகள், வழக்கமான மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


புதிய வைரஸ்

அதில், எட்டு பேருக்கு, 'பிஏ5' வகையும்,4 பேருக்கு, 'பிஏ4' வகை கொரோனா வைரஸ் தொற்றும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டுமே ஒமைக்ரான் வகையைச் சேர்ந்த கொரோனா வைரஸ் தான்.
தெலங்கானா, மஹாராஷ்டிரா மாநிலங்களில், ஏற்கனவே, 'பிஏ5' வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக இப்போது தான், 'பிஏ5' வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 8 பேரும் குணமடைந்து விட்டனர். கொரோனா நோயாளிகள், 790 பேரில், 46 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்; 16 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சையில் உள்ளனர். இதில், ஆறு பேர் ஐ.சி.யூ.,வில் (ICU) உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

கேள்விக்கு பதில்

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, பதில் அளித்த ராதாகிருஷ்ணன், தமிழக மருத்துவ பணிகள் கழகம் ஒளிவு மறைவு இன்றி செயல்படுகிறது. மிக மிக குறைவான விலையில் தான், மருந்து பொருட்கள் வாங்கப்படுகின்றன.

ஊட்டச்சத்துப் பெட்டகத்திற்கான டெண்டர் முடிந்ததா என்பதை உறுதி செய்த பிறகே பதில் கூற முடியும். ''குழந்தைகளுக்கான உணவையும், தாய்மார்களின் உணவையும் மாற்றி ஒப்பிடக்கூடாது,'' என்றார்.

மேலும் படிக்க...

பொது இடத்தில் 'ஊதினால்' ரூ.2,000 அபராதம் - ஆண்கள் கவனத்திற்கு!

10 நிமிடத்தில் மது டெலிவரி- குடிமகன்களுக்கு குஷி!

English Summary: New virus in Tamil Nadu - Health department in shock!
Published on: 06 June 2022, 05:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now