மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 June, 2022 9:52 PM IST

தகுதியற்றவர்களுக்கு ரேஷன் உதவி கிடைக்காது என்றும், அவர்கள் தங்களது கார்டை ரத்து செய்ய வேண்டும் என்றும் தகவல் பரவியது. அதற்கு உத்தரப் பிரதேச மாநில அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

இந்தியாவில் உள்ள வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்கள், ஒரு வேளையும் உணவின்றித் தவிக்கக்கூடாது என உன்னத நோக்கத்தில் அடிப்படையில், ரேஷன் திட்டம் அமலில் உள்ளது. இதன்படி, மாநில வாரியாக ரேஷன் திட்டம் மூலமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் உதவியும் இதன் மூலம் கிடைக்கிறது. தகுதியுள்ளவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு அதன் மூலம் உதவி வழங்கப்படுகிறது. உணவுப் பொருட்கள் இலவசமாகவும், மலிவு விலையிலும் கிடைக்கிறது.

குற்றச்சாட்டு

ரேஷன் திட்டம் மூலமாக நிறையப் பேர் உதவி பெற்று வருகின்றனர். வசதியில்லாத பலருக்கு ரேஷன் திட்டம் மிகப் பெரிய வரப் பிரசாதமாக இருக்கிறது.

விற்கும் அவலம்

அதே நேரம் நல்ல வசதி படைத்தவர்களும் ரேஷன் மூலமாக உதவி பெறுகின்றனர். ரேஷன் கடையில் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கி அவற்றைக் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால் உண்மையாகவே உதவி தேவைப்படும் ஏழை மக்களுக்கு ரேஷன் கிடைக்காமல் போகும் நிலை உருவாகிவிடுகிறது.

இதைத் தொடர்ந்து மே மாதத்தில், தகுதியற்ற நபர்கள் தங்களுடைய ரேஷன் கார்டை ஒப்படைக்குமாறு உத்தரப் பிரதேச மாநில அரசு கேட்டுக் கொண்டதாக பல ஊடக அறிக்கைகள் கூறின. மேலும், ரேஷன் கார்டை ஒப்படைக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

அரசு அறிவிப்பு

ரேஷன் கார்டு ரத்து தொடர்பாக வெளியான இச்செய்தி பயனாளிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. பல மாவட்டங்களில் ரேஷன் கார்டை ஒப்படைக்க மக்கள் அலைந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் தற்போது, ரேஷன் கார்டை ஒப்படைக்கவோ அல்லது ரத்து செய்யவோ எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று உத்தரப் பிரதேச மாநில அரசு தெளிவுபடுத்தியது.

யாருக்கு கிடைக்காது?

ரேஷன் கார்டு வைத்திருப்பதற்கு சில தகுதிகள் இருக்க வேண்டும் என்று தகவல் பரவியிருந்தது. அதாவது, குடிசை வீடு, மின் இணைப்பு, ஆயுத உரிமம் வைத்திருப்பவர், மோட்டார் சைக்கிள் உரிமையாளர், கோழி/மாடு வளர்ப்பில் ஈடுபட்டிருப்பவர் போன்றவர்கள் ரேஷன் கார்டு வைத்திருக்கத் தகுதியற்றவர் என்று கூறப்பட்டது. ஆனால் இதை அரசு மறுத்துள்ளது.

நிவாரணம்

ரேஷன் கார்டு தொடர்பாக ஊடகங்களில் பரவும் செய்திகளை உத்தரப் பிரதேச மாநில உணவுத் துறை ஆணையர் மறுத்துள்ளார். மேலும், இதுபோன்ற உத்தரவை பிறப்பித்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த சமீபத்திய உத்தரவையடுத்து, ரேஷன் கார்டில் இலவச ரேஷனை பயன்படுத்தி வந்த மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

கார்டு ரத்து?

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்-2013ன்படி தகுதியில்லாத கார்டுதாரர்களிடம் இருந்து ரேஷன் கார்டைத் திரும்பப் பெற எந்த விதியும் இல்லை என்று கூறப்படுகிறது. அரசு மட்டத்திலோ அல்லது உணவு ஆணையர் அலுவலகத்திலோ இருந்து மீட்டெடுப்பது தொடர்பான எந்த உத்தரவும் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

ரேசன் கடை ஊழியர்களுக்கு 14%அகவிலைப்படி உயர்வு- தமிழக அரசு உத்தரவு!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை -அரசு அறிவிப்பு!

English Summary: No cancellation of ration card - relief for cardholders!
Published on: 18 June 2022, 07:33 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now