மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 December, 2021 9:21 PM IST
No casualties by Omicron:

தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் (Omicron) தொற்று இதுவரை பல்வேறு உலக நாடுகளிலும் பரவிவிட்டது. இதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்று இதுவரை உறுதியாக யாரும் சொல்ல முடியாத சூழலில் இதுவரை இந்த வகை உருமாறிய கொரோனாவால் உயிரிழப்பு இல்லை என்ற ஆறுதல் தகவலை உலக சுகாதார நிறுவனம் (WHO தெரிவித்துள்ளது.

உயிரிழப்பு இல்லை (No casualties)

ஜெனீவாவில் உலக சுகாதார நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மெய்ர் பேசினார். அப்போது அவர், "இதுவரை உலக நாடுகள் எதுவுமே ஒமைக்ரான் திரிபால் உயிர் பலி ஏற்பட்டுள்ளதாக பதிவு செய்யவில்லை.

நாங்கள் பல்வேறு நாடுகளிடமிருந்தும் ஆதாரங்களைத் திரட்டி வருகிறோம். இன்னும் அதிகமான நாடுகள் ஒமைக்ரான் பாதிப்புக்கான மரபணு வரிசைப்படுத்துதல் சோதனயை செய்யும்போது அதிகமான தொற்று எண்ணிக்கை பதிவாகும்.

அப்போது நோயின் தாக்கம் குறித்து தகவல் கிடைக்கும். அதேபோல், நோயினால் ஏற்படும் உயிரிழப்பு குறித்தும் தகவலும் கிடைக்கலாம் என நம்புகிறோம். ஆனால், உண்மையில் ஒமைக்ரானால் உயிரிழப்பு இல்லை என்ற செய்தியையே விரும்புகிறோம். ஒமைக்ரான் குறித்து அஞ்சுவதைவிட மக்கள் இப்போதும் கூட டெல்டா வைரஸ் பற்றி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

டெல்டா வைரஸ் (Delta Virus)

ஏனெனில் இதுவரை பதிவாகி வரும் 99.8% தொற்றுக்கு டெல்டா திரிபு மட்டுமே காரணமாக இருக்கிறது. ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை இனி வரும் நாளில் அதிகரிக்கவும் செய்யலாம். ஏன் அதுவே கூட ஆதிக்கம் செலுத்தும் உருமாற்றமாகவும் இருக்கலாம். ஆனால் இப்போதைக்கு டெல்டா தான் ஆபத்தான திரிபாக உள்ளது. டெல்டாவில் இருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்.

இப்போதைக்கு உலகம் முழுவதும் இருந்து ஒமைக்ரான் பற்றிய தகவலைத் திரட்டி வருகிறோம். அது குறித்த தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்வார்கள். பின்னர் ஒரு மதிப்பீட்டுக்கு வருவார்கள். அதற்கு சிறிது காலம் ஆகலாம் என்று கூறினார்.

மேலும் படிக்க

புதிய வகை வைரஸ் பரவல்: கவனமாக இருங்கள்! அரசு அறிவுரை!

இந்தியாவிலும் நுழைந்தது ஒமைக்ரான் வைரஸ்: 2 பேருக்கு உறுதி!

English Summary: No casualties by Omicron: WHO consolation information!
Published on: 03 December 2021, 09:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now