News

Friday, 29 July 2022 02:12 PM , by: Elavarse Sivakumar

விடுமுறை நாட்களில் மாணவர்களுக்குப் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என, பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தியாக உள்ளது.

பொதுவாக வாரத்தில் 5 நாட்கள் பள்ளி இயங்கும். பணிநாட்கள் குறைவாக இருக்கும் போது, சனிக்கிழமைகளில் பள்ளி வேலைநாட்களாக அறிவிக்கப்படுவது வழக்கம்.இந்நிலையில், தற்போது பள்ளி நாட்கள் தவிர விடுமுறை நாட்களில் மாணவர்களை வகுப்புகளுக்கு வரச் சொல்லக் கூடாது என, ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

வகுப்புகள் கிடையாது

நடப்பு கல்வி ஆண்டில், சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் இயங்காது என்று  ஏற்கனவேத் தெரிவித்த தமிழக பள்ளிக் கல்வித் துறை, வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பள்ளிகள் இயங்கும் என்றும் அறிவித்து இருந்தது. இருப்பினும் சில பள்ளிகளில் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படுவதாக புகார் எழுந்தது.

கடும் நடவடிக்கை

இந்நிலையில், விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கக் கூடாது என்றும்,மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. அதேநேரத்தில், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்கக் கூடாது என்றும், பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் வர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

ஒரே சிரஞ்சியில் 39 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – அலட்சியத்தின் உச்சம்!

விமானத்தில் பயணித்த பெற்றோர்- இன்ப அதிர்ச்சி அளித்த மகன்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)